பொல்லுகள், குண்டுகளுடன் களமிறங்கினர் இந்திய மீனவர்கள்
By Vanan
யாழ். வடமராட்சி - பருத்தித்துறை கடற்பரப்பில் நேற்றைய தினமும் இந்திய மீனவர்களின் இழுவைப் படகுகள் அத்துமீறி மீன்பிடியில் ஈடுபட்டதாக தெரிவிக்கப்படுகிறது.
முனைப்பகுதி மீனவர்களின் 4 வலைகள் அறுத்து சேதமாக்கப்பட்டுள்ளதுடன் ஒரு மீனவரது படகு உடைத்து சேதமாக்கப்பட்டுள்ளது.
இந்திய மீனவர்களின் இழுவைப் படகிலிருந்து கற்கள், பொல்லுகள் ஈயக் குண்டுத் தாக்குதல்கள் மேற்கொள்ளப்பட்டதாக மீனவர்கள் குற்றம் சாட்டுகின்றனர்.
நேற்றைய தினம் இலங்கை கடற்படையினரால் 6 படகுகளும் 43 இந்திய மீனவர்களும் கைது செய்யப்பட்ட நிலையிலும் கூட, பருத்தித்துறை பகுதியில் இந்திய மீனவர்கள் அத்துமீறி மீன்பிடித்து சேதங்களை ஏற்படுத்தியிருப்பதாக தெரிவிக்கப்படுகின்றது.
மரண அறிவித்தல்
5ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
11ம் ஆண்டு நினைவஞ்சலி