கொழும்பில் முக்கிய சந்திப்புக்களில் ஈடுபட்ட இந்திய உயர் ஸ்தானிகர்
இலங்கைக்கான இந்திய உயர் ஸ்தானிகர் சந்தோஷ் ஜா(Santosh Jha), நேற்று(22) ஜனதா விமுக்தி பெரமுன (ஜேவிபி) கட்சியின் பொதுச்செயலாளர் ரில்வின் சில்வா(tilvin silva) மற்றும் முன்னாள் ஜனாதிபதிகள் ரணில் விக்ரமசிங்க(ranil wickremesinghe) மற்றும் மகிந்த ராஜபக்ச(mahinda rajapaksa) ஆகியோருடன் முக்கிய சந்திப்பில் ஈடுபட்டார்.
இந்திய உயர் ஸ்தானிகராலயத்தின் எக்ஸ் பதிவின்படி, ஜேவிபி பொதுச் செயலாளர் ரில்வின் சில்வாவுடனான சந்திப்பு, இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியின் வருகைக்குப் பிறகு இந்திய-இலங்கை உறவுகளின் உத்வேகம் குறித்து கவனம் செலுத்தியது.
இந்தியா, இலங்கை இணைந்து பணியாற்றும் வழிகள்
இந்திய உயர் ஸ்தானிகராலயம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், இந்தியாவும் இலங்கையும் பரஸ்பர நன்மை பயக்கும் கூட்டாண்மைக்காக இணைந்து பணியாற்றக்கூடிய வழிகள் குறித்தும் கலந்துரையாடல் கவனம் செலுத்தியுள்ளது.
High Commissioner @santjha met General Secretary of the JVP Mr. Tilvin Silva. Exchanged views on the momentum added to 🇮🇳🇱🇰 ties post the visit of the Prime Minister. Discussed ways in which India and Sri Lanka can work together for a more mutually beneficial partnership. pic.twitter.com/3GPjXajNg8
— India in Sri Lanka (@IndiainSL) April 22, 2025
முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுடனான சந்திப்பின் போது, இருதரப்பு கூட்டாண்மையில் சமீபத்திய முன்னேற்றங்கள் குறித்து இந்திய உயர் ஸ்தானிகர் அவருக்கு விளக்கினார்.
இந்தியாவிற்கும் இலங்கைக்கும் இடையிலான பகிரப்பட்ட வரலாறு மற்றும் எதிர்காலத்தின் வரம்பற்ற சாத்தியக்கூறுகள் குறித்தும் கலந்துரையாடல் கவனம் செலுத்தியுள்ளது.
மகிந்தவுடனான சந்திப்பில் பேசப்பட்ட விடயம்
இதற்கிடையில், முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவுடனான சந்திப்பில், இந்திய உயர் ஸ்தானிகர் சந்தோஷ் ஜா, இந்தியா-இலங்கை உறவுகளில் சமீபத்திய முன்னேற்றங்கள் குறித்து விளக்கினார்.
High Commissioner @santjha and former President @PresRajapaksa exchanged views on the versatile and dynamic India-Sri Lanka partnership in the context of global developments. HC also briefed him on the recent advancements in 🇮🇳🇱🇰 ties. pic.twitter.com/owGa3FUa56
— India in Sri Lanka (@IndiainSL) April 22, 2025
அத்துடன்உலகளாவிய முன்னேற்றங்களின் அடிப்படையில் பல்துறைசார்ந்ததும் துடிப்புமிக்கதுமான இந்திய இலங்கை உறவுகள் குறித்துஉரையாடியிருந்தார்.இரு நாடுகளுக்குமிடையிலான உறவுகளின் அண்மைய முன்னேற்றங்கள் குறித்தும் உயர் ஸ்தானிகர் முன்னாள் ஜனாதிபதிக்கு தெரிவித்தார்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
