இந்திய உயர்ஸ்தானிகர் ஹரிணி எம். பி. சந்திப்பு
இந்திய உயர்ஸ்தானிகர் எச். இ. சந்தோஷ் ஜா (Santosh Jha) மற்றும் தேசிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் ஹரிணி அமரசூரியவுக்கும் (Harini Amarasuriya) இடையிலான சந்திப்பொன்று இடம்பெற்றுள்ளது.
குறித்த சந்திப்பானது இன்றைய தினம் (23) இடம் பெற்றுள்ளது.
இந்தியா - இலங்கை
இதன்போது ஜனாதிபதி அநுர குமார திசாநாக்கவின் (Anura Kumara Dissanayake ) வெற்றிக்கு இந்திய உயர்ஸ்தானிகர் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
HC @santjha met NPP MP Hon. Harini Amarasuriya @Dr_HariniA and congratulated her on the victory of @anuradisanayake in the Presidential Elections. He also briefed her on the ongoing India-Sri Lanka bilateral initiatives. pic.twitter.com/PhB63MIBOs
— India in Sri Lanka (@IndiainSL) September 23, 2024
மேலும் இந்தியா (India) - இலங்கை (Sri Lanka) இருத்தரப்பு முயற்சிகள் குறித்து நாடாளுமன்ற உறுப்பினர் ஹரிணி அமரசூரிய இந்திய உயர்ஸ்தானிகருக்கு விளக்களித்துள்ளார்.
இதே வேளை இலங்கையின் 9ஆவது நிறைவேற்று அதிகாரமிக்க ஜனாதிபதியாக அநுரகுமார திசாநாயக்க பிரதம நீதியரசர் ஜயந்த ஜயசூரிய முன்னிலையில் இன்று (23) காலை பதவிப் பிரமாணம் செய்துகொண்டமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்... |