76 ஆண்டுகளின் பின்னர் நடந்த அதிசயம்: புதிய ஜனாதிபதி தொடர்பில் முன்னாள் எம்.பி

Anura Kumara Dissanayaka ITAK Sri lanka election 2024 sl presidential election Sri Lanka election updates
By Shadhu Shanker Sep 23, 2024 12:28 PM GMT
Report

76 ஆண்டுகளின் பின்னர் ஒரு அதிசயம் நடந்தது போல் இடதுசாரி கொள்கையில் உள்ள ஒருவர் ஜனாதிபதியாக தேர்வு செய்யப்பட்டுள்ளார் என இலங்கைத் தமிழரசுக் கட்சியின் மட்டக்களப்பு மாவட்ட முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஞானமுத்து சிறிநேசன் ( Gnanamuthu Srineshan) தெரிவித்துள்ளார்.

மட்டக்களப்பு (Batticaloa) செட்டிபாளையத்திலுள்ள அவரது இல்லத்தில் இன்று (23.09.2024) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின்போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.

இதன்போது அவர் மேலும் தெரிவிக்கையில்…. “இலங்கை சுதந்திர சுதந்திரம் அடைந்து 76 ஆண்டுகள் கடந்து இருக்கிறது. கடந்த காலத்தில் வலதுசாரி போக்குடைய தலைவர்கள் தான் இலங்கையில் பிரதம மந்திரிகளாகவோ ஜனாதிபதிகளாகவோ, இந்த நாட்டை ஆட்சி செய்திருக்கிறார்கள்.

அநுரவின் அரசிற்கு ஆதரவை வழங்க மறுக்கும் கட்சிகள்

அநுரவின் அரசிற்கு ஆதரவை வழங்க மறுக்கும் கட்சிகள்

 ஒன்பதாவது ஜனாதிபதி தேர்தல் 

ஆனால் அவர்கள் ஆட்சி செய்திருக்கின்றார்கள் நாட்டை வளப்படுத்தவில்லை 76 ஆண்டுகளின் பின்னர் ஒரு அதிசயம் நடந்தது போல் ஒரு இடதுசாரி கொள்கையில் உள்ள ஒருவர் தேர்தல் மூலமாக ஜனாதிபதியாக ஒருவர் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

76 ஆண்டுகளின் பின்னர் நடந்த அதிசயம்: புதிய ஜனாதிபதி தொடர்பில் முன்னாள் எம்.பி | Anura Dissanayake Sri Lanka S New Leftist Leader

அந்த வகையில் ஒன்பதாவது ஜனாதிபதி தேர்தல் என்பது ஒரு முக்கியமான தேர்தலாக பார்க்கப்படுகின்றது. கடந்த தேர்தலில் நான்கு விதமான வாக்குகளை பெற்ற ஒரு தலைவர் தற்போது 40 வீதத்துக்கு மேலான வாக்குகளை பெற்று ஜனாதிபதியாக ஆட்சி பீடம் ஏறியிருக்கின்றார்.

அதாவது அனுரகுமார திசாநாயக்கா (Anurakumara Dissanayake)  இடதுசாரி தலைவராக இருந்து தற்போது ஜனாதிபதியாக இலங்கையில் பதவிஏற்று இருக்கிறார்கள். கடந்த எட்டு ஜனாதிபதி தேர்தலிலும் தெரிவு செய்யப்பட்டவர்கள் இந்த நாட்டுக்கோ இந்த நாட்டில் இருக்கின்ற பிரச்சனைகளுக்கு அவர்கள் பணியாற்றியது இல்லை என்று தான் கூற வேண்டும்.

அநுரவுக்கு மாலைதீவிலிருந்து வந்த வாழ்த்து செய்தி

அநுரவுக்கு மாலைதீவிலிருந்து வந்த வாழ்த்து செய்தி

நாட்டில் மாற்றம்

எனவே அனுரகுமார திசநாயக்க அவர்களைப் பொறுத்தவரையில் அவர் ஒரு இடதுசாரி சிந்தனையில் உள்ளவர். இடதுசாரி போக்குணையுடையவர். இரண்டு தடவைகள் அவர்களின் புரட்சிகள் மூலமாக நாட்டில் மாற்றத்தை ஏற்படுத்த வேண்டும் என நினைத்தவர்கள். ஆனால் முடியவில்லை.

76 ஆண்டுகளின் பின்னர் நடந்த அதிசயம்: புதிய ஜனாதிபதி தொடர்பில் முன்னாள் எம்.பி | Anura Dissanayake Sri Lanka S New Leftist Leader

இப்போது அவர் ஜனநாயக வழி மூலமாக அவர் தேர்வு செய்யப்பட்டிருக்கின்றார். இந்த நிலையில் இந்த நாட்டில் புரையோடிப் போயிருக்கின்ற இன பிரச்சனை உள்ளிட்ட இன்னும் பல பிரச்சினைகளை தீர்க்க வேண்டிய பொறுப்பு அவரிடம் இருக்கிறது.

எனவே வெற்றி பெற்று பதவியேற்றி இருக்கின்ற தலைவர் அனுரகுமார திசநாயக்க அவர்களுக்கு எனது மக்கள் சார்பாக பாராட்டுக்களையும் வாழ்த்துக்களையும் தெரிவித்துக் கொள்கின்றோம்.

தமிழர் பகுதியில் கொண்டாடப்பட்ட அநுரவின் வெற்றி

தமிழர் பகுதியில் கொண்டாடப்பட்ட அநுரவின் வெற்றி

தமிழ் பேசும் மக்கள்

நீங்கள் இந்த நாட்டில் நிலையான ஒரு தலைவராக தொடர்ந்தும் நீடிக்க வேண்டுமாக இருந்தால் இந்த நாட்டில் புரையோடிப் போயிருக்கின்ற இனப் பிரச்சினையை தீர்ப்பதன் மூலமாக இந்த நாட்டில் இருந்து வெளியேறிய மூளைசாலிகள் தொழில் வல்லுநர்கள் மீண்டும் இந்த நாட்டை வளப்படுத்தக்கூடிய சூழலை உருவாக்க வேண்டும்.

76 ஆண்டுகளின் பின்னர் நடந்த அதிசயம்: புதிய ஜனாதிபதி தொடர்பில் முன்னாள் எம்.பி | Anura Dissanayake Sri Lanka S New Leftist Leader

அதற்கு முதலில் செய்ய வேண்டிய விடயம் இந்த இனப் பிரச்சினையை தீர்ப்பதற்கு நியாயமான வழியை வழியை மேற்கொள்ள வேண்டும். அந்த காலத்தில் ஆட்சி செய்த தலைவர்கள் இனப்பிரச்சனையும், இனவாதத்தையும், மதவாதத்தையும், வைத்துக்கொண்டு இந்த நாட்டை ஆட்சி செய்திருக்கின்றார்கள். அதன் மூலமாக இந்த நாடு குட்டிச்சுவர் ஆக்கப்பட்டிருக்கின்றது. பொருளாதாரத்தில் விழுந்து கிடக்கின்றது.

எனவே பொருளாதாரத்தை கட்டி எழுப்புவதை மாத்திரம் அல்லாமல் இந்த தேசிய இனப்பிரச்சினை தீர்ப்பதற்குரிய ஒரு சந்தர்ப்பம் உங்கள் கையில் கிடைத்திருக்கின்றது. இந்த சந்தர்ப்பத்தை முறையாக பயன்படுத்தி பிரச்சனையை தீர்த்தால் இந்த தமிழ் தேசிய மக்கள் உங்களை மறக்க மாட்டார்கள்.

அது மாத்திரமில்லாமல் இந்த நாட்டில் ஒன்பதாவது ஜனாதிபதி என்பவர் ஒரு சாதனையாளராக இந்த சரித்திர ஏட்டில் எழுதப்படக்கூடிய நிலைமை உங்களுக்கு கிடைக்கும். அந்த சந்தர்ப்பத்தை நீங்கள் செய்ய வேண்டும் என்று தமிழ் மக்கள் சார்பாக தமிழ் பேசும் மக்கள் சார்பாக உருக்கமான வேண்டுகோளை விடுக்கின்றேன்” என அவர் இதன்போது தெரிவித்தார்.

படுகொலை செய்யப்பட்ட லசந்த விக்ரமதுங்க : அநுரவிடம் முன்வைக்கப்பட்டுள்ள கோரிக்கை

படுகொலை செய்யப்பட்ட லசந்த விக்ரமதுங்க : அநுரவிடம் முன்வைக்கப்பட்டுள்ள கோரிக்கை

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...!  
ReeCha
மரண அறிவித்தல்

தொண்டைமானாறு, Lausanne, Switzerland

01 Sep, 2026
அகாலமரணம்
5ம் ஆண்டு நினைவஞ்சலி
2ம் ஆண்டு நினைவஞ்சலி
8ம் ஆண்டு நினைவஞ்சலி

கரணவாய் மேற்கு

14 Sep, 2018
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புலோலி தெற்கு, புலோலி

14 Sep, 2021
மரண அறிவித்தல்

Sea Port Estate, Malaysia, Petaling Jaya, Malaysia, Montreal, Canada, Scarborough, Canada, Oakville, Canada

11 Sep, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

கொழும்பு, வட்டுக்கோட்டை, சுவாசி-லெ-ருவா, France

07 Sep, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, யாழ்ப்பாணம், சிங்கப்பூர், Singapore, நியூஸ்லாந்து, New Zealand

13 Sep, 2021
3ம் ஆண்டு நினைவஞ்சலி

இருபாலை, கொழும்பு

03 Sep, 2023
6ம் ஆண்டு நினைவஞ்சலி

சரசாலை வடக்கு, சுவிஸ், Switzerland, England, United Kingdom

14 Sep, 2020
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நவாலி தெற்கு, Zürich, Switzerland

12 Sep, 2025
மரண அறிவித்தல்

மந்துவில், கொடிகாமம்

11 Sep, 2026
மரண அறிவித்தல்

அச்சுவேலி, Bondy, France

09 Sep, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மாவிட்டபுரம், முரசுமோட்டை

20 Sep, 2025
மரண அறிவித்தல்

கிளிநொச்சி, Rapperswil-Jona, Switzerland

08 Sep, 2026
மரண அறிவித்தல்

மட்டக்களப்பு, சிலாபம், Oslo, Norway

02 Sep, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

நயினாதீவு 3ம் வட்டாரம், பருத்தித்துறை, அல்வாய் வடக்கு, சூரிச், Switzerland

10 Sep, 2021
மரண அறிவித்தல்

உசன், Jaffna, Ibadan, Nigeria, Riyadh, Saudi Arabia, London, United Kingdom

05 Sep, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

நாரந்தனை, பிரான்ஸ், France

08 Sep, 2016
3ம் ஆண்டு நினைவஞ்சலி

தண்ணீரூற்று, வத்தளை, Tolworth, United Kingdom

11 Sep, 2023
மரண அறிவித்தல்

அனலைதீவு 4ம் வட்டாரம், Caledon, Canada

06 Sep, 2026