8 மாத குழந்தை உட்பட இந்திய குடும்பத்தை சேர்ந்த நால்வர் கொலை! அமெரிக்காவில் அதிர்ச்சி சம்பவம்
அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்தில் இந்திய வம்சாவளி சேர்ந்த நால்வர் கடந்த திங்கட்கிழமை கடத்தப்பட்ட நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளனர்.
இந்திய வம்சாவளியை சேர்ந்த ஜஸ்தீப் சிங் (36) அவரது மனைவி ஜஸ்லீன் கவுர், மற்றும் 8 மாத பெண் குழந்தை ஆரூஹி தேரி, உறவினர் அமன்தீப் சிங் (39) இவ்வாறு கடத்தப்பட்டு கொலை செய்யப்பட்டுள்ளனர்.
சடலமாக மீட்பு

கலிபோர்னியாவின் மெர்செட் கவுன்டி பகுதியில் உள்ள நெடுஞ்சாலையில் இவர்கள் 4 பேரும் கடந்த திங்கட்கிழமை கடத்தப்பட்டுள்ளனர்.
குடும்ப உறுப்பினர்களில் ஒருவருக்குச் சொந்தமான வாகனம் கடந்த திங்கள்கிழமை பிற்பகுதியில் தீப்பிடித்து எரிந்தது நிலையில் கண்டுபிடிக்கப்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது.
இந்நிலையில், காணாமல் போன 4 பேரின் சடலமும் இன்று இண்டியானா சாலை மற்றும் ஹட்ச்ஹின்சன் சாலையை ஒட்டிய பழத்தோட்டம் ஒன்றில் மீட்கப்பட்டுள்ளது.
தொழிலாளி ஒருவர் கொடுத்த தகவலின் பேரில் சடலங்கள் கண்டுபிடிக்கப்பட்டு மீட்கப்பட்டுள்ளன.
சமபவம் தொடர்பில் ஒருவர் கைது

இதேவேளை, இந்தக் கடத்தல் மற்றும் கொலை தொடர்பாக ஜீஸஸ் மேனுவல் சால்கடோ என்ற 48 வயதுடைய நபர் கைது செய்யப்பட்டுள்ளதாக அமெரிக்க காவல்துறை தெரிவித்துள்ளது.
அவர்கள் கொலை செய்யப்பட்ட சம்பவம் அமெரிக்கா வாழ் இந்தியர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இதேவேளை, கொலை செய்யப்பட்டவர்கள் இந்தியாவின் பஞ்சாப் மாநிலத்தை பூர்வீகமாக கொண்ட சீக்கிய மதத்தை சேர்ந்தவர்கள் எனத் தெரிவிக்கப்படுகின்றது.
சித்திரவதையின் காயங்கள் உடலில் மாத்திரம் தெரிவதல்ல… 11 மணி நேரம் முன்