கொழும்பு துறைமுகத்தில் தரித்தது இந்திய போர்க்கப்பல்
இந்திய கடற்படையின்(indian navy) போர்க்கப்பலான 'INS KUTHAR', உத்தியோகபூர்வ விஜயத்தினை மேற்கொண்டு கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்துள்ளது. அந்தக் கப்பல் இன்று (03) காலை கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்ததாக சிறிலங்கா கடற்படை தெரிவித்துள்ளது.
கொழும்பு(colombo) துறைமுகத்தை வந்தடைந்துள்ள 'INS KUTHAR' என்ற கொர்வெட் வகைக் கப்பல் 91.16 மீட்டர் நீளம் கொண்டது. இந்தக் கப்பலில் 129 பேர் கொண்ட பணியாளர்கள் உள்ளனர், மேலும் இதற்கு தளபதியாக நிதின் சர்மா தலைமை தாங்குகிறார்.
அதிகாரபூர்வ சந்திப்பு
இந்த அதிகாரபூர்வ விஜயத்தின் போது, 'INS KUTHAR' கப்பலின் கட்டளை அதிகாரிக்கும் மேற்கு கடற்படை கட்டளைத் தளபதிக்கும் இடையே மேற்கு கடற்படை கட்டளைத் தலைமையகத்தில் அதிகாரபூர்வ சந்திப்பு நடைபெற்றது.
சுற்றுலாத் தலங்களைப் பார்வை
இந்த போர்க்கப்பல் நாட்டில் தங்கியிருக்கும் காலத்தில், அதன் குழுவினர் கொழும்பு பகுதியில் உள்ள கவர்ச்சிகரமான சுற்றுலாத் தலங்களைப் பார்வையிடவும், இரு நாடுகளின் கடற்படைகளுக்கு இடையே நட்புறவு மற்றும் பயிற்சி பரிமாற்றங்களை மேம்படுத்துவதற்காக சிறிலங்கா கடற்படை ஏற்பாடு செய்யும் நிகழ்ச்சிகளில் பங்கேற்கவும் திட்டமிடப்பட்டுள்ளது.
கப்பல் அதன் அதிகாரபூர்வ சுற்றுப்பயணத்தை முடித்துக்கொண்டு மார்ச் 6, 2025 அன்று நாட்டிலிருந்து புறப்பட திட்டமிடப்பட்டுள்ளது
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |


ஈழத் தாய்மார்களுக்கு எல்லா இரவுகளும் சிவராத்திரியே… 5 நாட்கள் முன்
