விசா கொள்கையை மறுபரிசீலனை செய்ய பிரித்தானிய வாழ் இந்தியர்கள் கோரிக்கை
பிரித்தானிய (United Kingdom) அரசாங்கம் தற்போது கடைபிடித்துவரும் விசா கொள்கையை மறுபரிசீலனை செய்யுமாறு அங்கு வாழும் இந்தியர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
விசா கட்டணங்கள் அதிகமாகவும், செயலாக்கம் மெதுவாகவும், குடும்ப உறுப்பினர்களை இணைக்கும் வாய்ப்புகள் குறைவாகவும் இருப்பதாக தெரிவித்துள்ளார்.
இதனால், இந்தியா மற்றும் பிரித்தானியா இடையிலான உறவுகள் பாதிக்கக்கூடுமென அவர்கள் கவலை தெரிவித்துள்ளனர்.
வேலை வாய்ப்பு
இந்திய மாணவர்கள் பிரித்தானியாவில் பல்கலைக்கழகங்களுக்கு பெரும் நிதி ஆதாரமாக உள்ளனர். ஆனால், படிப்பு முடிந்த பிறகு, வேலை வாய்ப்புகள் குறைவாக இருப்பதால், அவர்கள் மற்ற நாடுகளுக்கு செல்லும் வாய்ப்பு அதிகரிக்கிறது.
இது பிரித்தானியாவில் சர்வதேச மாணவர்களின் ஈர்ப்பை குறைக்கும் அபாயத்தை ஏற்படுத்துகிறது.
பிரித்தானியாவில் மருத்துவம் மற்றும் தகவல் தொழில்நுட்பம் போன்ற முக்கிய துறைகளில் இந்தியர்கள் முக்கிய பங்கு வகிக்கின்றனர். ஆனால் இந்த கடுமையான விசா விதிகளால் பணியிடங்களின் பற்றாக்குறை மேலும் அதிகரிக்கும் அபாயம் உள்ளது.
இந்நிலையில், விசா கொள்கையை மாற்ற கூறுவதற்காக இந்தியர்கள் விரைவில் பிரித்தானிய வெளிநாட்டு அலுவலகத்துடன் சந்திப்பு நடத்த திட்டமிட்டுள்ளனர்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |


ஜனாதிபதிகளின் சிறப்புரிமை முடிவை ஆரம்பித்துவைத்த ரணிலின் கைது 18 மணி நேரம் முன்

ஹரிணி ஜேவிபிக்கு எதிராக கிளர்ச்சி செய்வாரா?
5 நாட்கள் முன்