இந்தியாவில் ஒரேஞ்ச் பழ வியாபாரிக்கு கிடைத்த உயரிய விருது - அவர் செய்த சாதனை என்ன? (படங்கள் இணைப்பு)
இந்தியாவின் கர்நாடக மாநிலத்தில் உள்ள ஒரு சிறிய கிராமத்தைச் சேர்ந்த ஒரேஞ்ச் பழ வியாபாரி ஒருவர் பத்மஸ்ரீ விருது பெற்றுள்ளார்.
பத்மஸ்ரீ விருது என்பது இந்தியக் குடிமகனுக்கு வழங்கப்படும் உயரிய கௌரவமாகும். 66 வயதான முஸ்லிம் ஹிரேகலா ஹஜப்பா என்ற குறித்த நபர், ஒரேஞ்ச் பழங்களை விற்றதன் மூலம் கிடைக்கும் பணத்தை தான் வசிக்கும் கிராமத்தில் சிறு குழந்தைகளுக்கான பள்ளியை அமைத்து அதனை திறம்பட செயற்படுத்தி வந்த நிலையில் பத்மஸ்ரீ விருதை வென்றார்.
ஆரம்பத்தில், கிராமத்தில் உள்ள ஏழைக் குடும்பங்களைச் சேர்ந்த 28 குழந்தைகள் மட்டுமே பள்ளியில் படித்து வந்தனர். இன்று கிராமத்தில் 175 குழந்தைகள் அங்கு படிக்கின்றனர். ஹாஜப்பா பள்ளியை பராமரித்து, குழந்தைகளுக்கு உணவு கூட தயார் செய்கிறார்.
பல ஆண்டுகளாக ஹாஜப்பாவின் கிராமத்தில் பள்ளி கட்டுவதில் அதிகாரிகள் கவனம் செலுத்தவில்லை. ஹஜப்பா பிரதான பேருந்து நிறுத்தத்தில் அமைக்கப்பட்டுள்ள சிறிய சாவடியில் இருந்து ஒரேஞ்ச் பழங்களை விற்பனை செய்கிறார். ஒரேஞ்ச் பழங்களை விற்று ஒரு நாளைக்கு 150 ரூபாய் சம்பாதிப்பதாக கூறப்படுகிறது.
வசூலான பணத்தை வைத்து கிராமத்து குழந்தைகளுக்கு ஆரம்ப பள்ளி கட்ட ஹாஜப்பா முடிவு செய்ததாக கூறப்படுகிறது. அவருக்கு பல தொழிலதிபர்களும் ஆதரவு தெரிவித்தனர்.
'எனக்கு கற்க வரவில்லை. கர்நாடகாதான் பேசத் தெரியும். எனக்கு ஹிந்தி பேசத் தெரியாது. ஆங்கிலம் பேசத் தெரியாது. பல ஆண்டுகளுக்கு முன்பு நான் வெளிநாட்டினர் ஒரு குழுவை சந்தித்தேன். அவர்கள் சொன்னது எதுவும் எனக்கு விளங்கவில்லை. அப்போதுதான் எனக்குக் கிடைக்காத கல்வியை எனது கிராமத்துப் பிள்ளைகளுக்குக் கொடுக்க வேண்டும் என்பதை உணர்ந்தேன். எனது கிராமத்தில் உள்ள குழந்தைகள் அடிப்படைக் கல்வியைப் பெறவில்லை. அவர்களால் கற்றுக் கொள்ள முடிந்தால், அவர்கள் என்னை விட உயர்ந்து செல்வார்கள் என்று நான் உறுதியாக நம்பினேன். அதனால்தான் நான் ஒரு சிறிய பள்ளியைத் தொடங்கினேன், ”என்று ஹாஜப்பா விளக்குகிறார்.
ஹாஜப்பாவின் பள்ளி பிரபலமடைந்து, அதில் சேர்க்கும் குழந்தைகளின் எண்ணிக்கை அதிகரித்ததால், ஹாஜப்பாவுக்கு பக்கத்திலிருந்த மற்றொரு நிலத்தை வாங்கி பள்ளியை தரம் உயர்த்த வேண்டியிருந்தது. ஹஜப்பா தான் சேமித்து வைத்திருந்த பணம் மட்டுமின்றி கூடுதல் கடனையும் பெற்று நிலத்தை வாங்கியதாக கூறப்படுகிறது.
அதிகாரிகளின் உதவி இல்லாத போதிலும், வணிகர்கள் மற்றும் பள்ளி மாணவர்களின் பெற்றோர்களிடமிருந்தும் உதவி சேகரிக்கப்பட்டது.
பத்ம விருதுகள் இந்திய குடிமகனுக்கு வழங்கப்படும் உயரிய விருதாக கருதப்படுகிறது. பத்ம விபூஷன், மற்றும் பத்மஸ்ரீ என விருதுகள் வழங்கப்படுகின்றன. 'கொவிட் 19' தொற்றுநோய் காரணமாக, பத்ம விருதுகள் கடந்த ஆண்டு நடைபெறாமல், இந்த ஆண்டு நடத்தப்பட்டன. இது ஒக்டோபர் 8 மற்றும் 9 ஆம் திகதிகளில் புதுடில்லியில் உள்ள குடியரசுத் தலைவர் மாளிகையான ராஷ்டிரபதி பவனில் நடைபெற்றது.
'பத்ம' விருது வழங்கும் விழா இந்திய குடியரசுத் தலைவர் தலைமையில் நடைபெற்றது. இந்த விருதுகளை தற்போதைய இந்திய குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் வழங்கினார். மற்றும் விருது வழங்கும் விழாவில் இந்திய பிரதமர் நரேந்திர மோடியும் கலந்து கொண்டார்.
விருது வழங்கும் விழாவில், இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியுடன் பேச ஹஜப்பாவுக்கு வாய்ப்பு கிடைத்தது, மங்களூர் கிராமத்தில் குழந்தைகளுக்காக உயர்நிலைப் பள்ளி கட்டப்பட வேண்டும் என்றும் அவர் கோரிக்கை விடுத்ததாக ஊடகச் செய்திகள் தெரிவிக்கின்றன.
ஹெரகலா ஹஜப்பா மட்டுமன்றி நூற்றி இருவருக்கு இம்முறை பத்மஸ்ரீ விருது வழங்கப்பட்டது. மேலும், 7 'பத்ம விபூஷன்' விருதுகளும், 10 'பத்ம பூஷன்' விருதுகளும் வழங்கப்பட்டன. இந்திய பட்மிண்டன் பி.வி. சிந்து, கால்பந்து வீராங்கனை ஒய்னம் பெம்பெம் தேவி, பாடகர் பண்டிட் சானுலால் மிஸ்ரா, பத்திரிகையாளர் லால்பி அக்தங்கா பச்சுவா, பொலிவுட் திரைப்பட தயாரிப்பாளர் ஏக்தா கபூர், இயக்குனர் கரண் ஜோஹர் மற்றும் மறைந்த பாடகர் எஸ்.பி.பாலசுப்ரமணியம் ஆகியோருக்கும் விருதுகள் கிடைத்தன.
ஹெரகலா ஹஜப்பாவைத் தவிர, கர்நாடகா மாநிலத்தைச் சேர்ந்த 72 வயது பழங்குடியினப் பெண்ணான உலாசி கவுடா, சுற்றுச்சூழல் பாதுகாப்பில் ஆற்றிய பங்களிப்பிற்காக பத்மஸ்ரீ விருது பெற்றார். ஹாஜப்பாவைப் போலவே இவரும் பலரது கவனத்தை ஈர்த்தார். வெறுங்காலுடன், பாரம்பரிய உடையில், விருது வழங்கும் விழாவில் பங்கேற்றார்.

