கிழக்கில் அரங்கேறிய படுகொலைகள்..! CID யிடம் சிக்கிய இனிய பாரதியின் மற்றுமொரு சகா
மட்டக்களப்பில் (Batticaloa) சிஜடி கைது செய்த இனியபாரதியின் சகா 7 மணி நேர விசாரணையின் பின் விடுதலை செய்யப்பட்டுள்ளார்.
சிஜடியினரால் நேற்று திங்கட்கிழமை (25) கைது செய்யப்பட்ட இனிய பாரதியின் சகாவான பாலசுந்தரம் என்பவரை சுமார் 7 மணித்தியால விசாரணையின் பின்னர் சிஐடியினர் விடுதலை செய்துள்ளதாக கைது செய்யப்பட்டவரின் உறவினர்கள் தெரிவித்தனர்.
காணாமல் ஆக்கப்பட்ட சம்பவம்
கடந்த ஜுலை 6ஆம் திகதி அம்பாறை திருக்கோவில் பிரதேச சபையின் முன்னாள் தவிசாளர் உதயகுமார் துப்பாக்கியால் சுட்டு படுகொலை செய்யப்பட்ட சம்பவம் உட்பட 2005 மற்றும் 2008 க்கு இடையில் கிழக்கு மாகாணத்தில் நடந்த கொலைகள், கடத்தல்கள், காணாமல் போதல்கள், துப்பாக்கிகளைப் பயன்படுத்துதல், சித்திரவதைக் கூடங்களை நடத்துதல் மிரட்டி பணம் பறித்தல் போன்ற சம்பவங்களுடன் தொடர்புடைய இனியபாரதி என்றழைக்கப்படும் கே. புஸ்பகுமார் அவரது சகாவான சசீதரன் தவசீலன் ஆகியோரை குற்ற விசாரணைப் பிரிவினர் கைது செய்தனர்.
இதனையடுத்து இவர்களிடம் மேற்கொண்ட விசாரணையின் அடிப்படையில் இனியபாரதியுடன் சேர்ந்து இயங்கிவந்த வரும் அவரின் சகாவான களுவங்கேணியைச் சேர்ந்த பாலசுந்தரம் என்பவரை இவரது வீட்டில் வைத்து குற்ற விசாரணைப் பிரிவினர் கைது செய்தனர்.
இதனையடுத்து அவரை கொண்டு சென்று சுமார் 7 மணித்தியால தொடர் விசாரணையின் பின்னர் இரவு 9.00 மணிக்கு விடுவித்துள்ளனர்.
இதேவேளை, மட்டக்களப்பில் (Batticaloa) பிள்ளையானின் (Pillayan) சகாவான சின்னத்தம்பி என அழைக்கப்படும் பூபாலப்பிள்ளை என்பவர் குற்ற விசாரணைப் பிரிவினால் கைது செய்யப்பட்டுள்ளார்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |

