அரகலய இழப்பீடு பெற்ற முன்னாள் எம்.பிக்கள் தொடர்பில் விசாரணைகள் ஆரம்பம்
கடந்த 2022 ஆம் ஆண்டு இடம்பெற்ற அரகலய போராட்டத்தின் போது தங்களது வீடுகள் சேதமாக்கப்பட்டதாக கூறி அரசாங்கத்திடமிருந்து பாரியளவில் இழப்பீட்டை பெற்றுக் கொண்ட முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்கள் குறித்து விசாரணைகள் ஆரம்பிக்கப்படும் என சுகாதார மற்றும் வெகுசன ஊடக அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ(Nalinda Jayatissa) தெரிவித்துள்ளார்.
பேராதனை போதனா வைத்தியசாலையில் இன்று(08.02.2025) இடம்பெற்ற நிகழ்வொன்றின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
இது தொடர்பில் அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது“ கடந்த காலங்களில் இழப்பீடுகளை பெற்றுக்கொண்ட முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்கள் தொடர்பான தகவல்கள் தற்போது கிடைத்துள்ள நிலையில் இந்த விசாரணைகள் ஆரம்பிக்கப்படவுள்ளன.
அரகலய இழப்பீடு
அத்துடன், குறித்த மக்கள் பிரதிநிதிகள் தங்கள் சொத்துக்கள் மற்றும் பொறுப்புகள் தொடர்பாக நாடாளுமன்றத்திற்குத் தகவல் வழங்கியுள்ளனரா என்பது தொடர்பில் கண்டறியப்பட வேண்டும்” என அவர் தெரிவித்துள்ளார்.
மேலும், முன்னாள் ஜனாதிபதி கோட்டாபயவிற்கு எதிராக கடந்த 2022 ஆம் ஆண்டு கொழும்பில் இடம்பெற்ற பாரிய போராட்டமே அரகலய போராட்டம் என்பது குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
![ReeCha](https://cdn.ibcstack.com/bucket/6721e84c63e0a.webp)