பூஜித் ஜயசுந்தரவுக்கு நீதிமன்றம் கொடுத்த உத்தரவு!
உயிர்த்த ஞாயிறு குண்டுத் தாக்குதலை தவிர்க்க நடவடிக்கை எடுக்கவில்லை என்ற குற்றச்சாட்டு சுமத்தப்பட்டிருந்த முன்னாள் காவல்துறை மாஅதிபர் பூஜித் ஜயசுந்தர (Pujith Jayasundara) அனைத்து குற்றச்சாட்டுக்களிலும் இருந்தும் விடுதலை செய்யப்பட்டுள்ளார்.
கொழும்பு விசேட மேல் நீதிமன்றம் இன்று இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது.
நாமல் பலல்லே, ஆதித்ய பட்டபெதி, மொஹமட் இம்சதீன் ஆகிய நீதிபதிகள் குழாமினால் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
2019ஆம் அண்டு உயிர்த்த ஞாயிறு தினத்தன்று நாட்டில் பல இடங்களில் தற்கொலைக் குண்டுத் தாக்குதல் நடத்தப்பட்டு பலர் உயிரிழந்தனர்.
இதனை தடுப்பதற்கு முன்னாள் பாதுகாப்பு செயலாளர் ஹேமசிறி பெர்ணான்டோ மற்றும் காவற்துறை மாஅதிபர் பூஜித் ஜயசுந்தர ஆகியோர் நடவடிக்கை எடுக்கவில்லை என அவர்கள் மீது குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டு வழக்குப் பதிவு செய்யப்பட்டிருந்தது.
இந்நிலையில் முன்னாள் காவல்துறை மாஅதிபர் பூஜித் ஜயசுந்தர அனைத்து வழக்குகளிலிருந்தும் விடுதலை செய்யப்பட்டுள்ளார்