நாட்டை விட்டு தப்பிச் செல்லும் அரசியல்வாதிகள் : புலனாய்வுத்துறைக்கு பறந்த உத்தரவு
இலஞ்சக் குற்றச்சாட்டுகள் தொடர்பாக இலஞ்ச ஆணையம் அல்லது பிற அமைப்புகள் விசாரணைகளைத் தொடங்கிய பின்னர், உடல்நலக்குறைவு என்று பொய் சொல்லி வெளிநாடு செல்ல முயற்சிக்கும் அரசியல்வாதிகள் மற்றும் அவர்களது குடும்ப உறுப்பினர்கள் குறித்த தகவல்களை விசாரிக்குமாறு புலனாய்வு அமைப்புகளுக்கு அரசாங்கம் அறிவுறுத்தியுள்ளது.
அதன்படி, பல புலனாய்வு அமைப்புகள் இப்போதெல்லாம் அத்தகைய நபர்களைக் கூர்ந்து கண்காணித்து வருகின்றன.
மருத்துவ அறிக்கைகள் உண்மையானவையா என விசாரணை
இதற்கிடையில், குற்றம் சாட்டப்பட்ட சில அரசியல்வாதிகள் மற்றும் அவர்களது குடும்ப உறுப்பினர்கள் சமர்ப்பித்த மருத்துவ அறிக்கைகள் உண்மையானவையா என்பதை உறுதிப்படுத்த விசாரணைகளை நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.

சில விசாரணைகள் தொடங்கப்பட்ட பின்னர் வெளிநாடுகளிலிருந்து திரும்பாத பல அரசியல்வாதிகளையும் உளவு அமைப்புகள் விசாரித்து வருவதாக பாதுகாப்பு வட்டாரங்களில் இருந்து தெரியவருகிறது.
தூதரக மட்டத்திலும் பேச்சு
அவர்களைத் தாயகம் திரும்ப அழைத்து வருவது குறித்து தூதரக மட்டத்திலும் பேச்சுவார்த்தைகள் நடைபெற்று வருவதாக அந்த வட்டாரங்கள் மேலும் தெரிவித்தன.

இதற்கிடையில், பல்வேறு பொதுமன்னிப்புகளின் கீழ் விடுவிக்கப்பட்ட சில நபர்கள் குறித்தும் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. அவர்களது விடுதலை சட்டபூர்வமானதா என்பதை உறுதி செய்வதே இந்த விசாரணையின் நோக்கம் என நீதித்துறை வட்டாரங்கள் தெரிவித்தன.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |