சடுதியாக அதிகரித்த கடன் அட்டைகளுக்கான வட்டி விகிதம்
Sri Lanka Economic Crisis
Sri Lankan Peoples
Sri Lankan political crisis
By Kiruththikan
30% ஆல் அதிகரித்த வட்டி விகிதம்
இலங்கையில் உள்ள பல வணிக வங்கிகள் தமது கடன் அட்டைகளுக்கான வட்டி விகிதத்தை அதிகரித்துள்ளதாகத் தெரிவித்துள்ளது.
தற்போதைய நிலையில் பல வணிக வங்கிகள் தமது கடன் அட்டைகளுக்கான வட்டி விகிதத்தை 30% ஆக அதிகரித்துள்ளன.
கடன் அட்டைகளுக்கான அதிகபட்ச வட்டி வீத வரம்பை நீக்குவதற்கு இலங்கை மத்திய வங்கியின் நாணயச் சபை கடந்த ஏப்ரல் 08 ஆம் திகதி தீர்மானித்தது.

1,973,481 கடன் அட்டைகள் செயலில்
இந்த தீர்மானத்தை தொடர்ந்து, கடன் அட்டை வட்டி விகிதம் 18%லிருந்து 24% ஆகவும், தற்போது 30% ஆகவும் உயர்த்தப்பட்டுள்ளது.
இதேவேளை, இலங்கை மத்திய வங்கியின் சமீபத்திய தரவுகளின்படி, இந்த ஆண்டு ஏப்ரல் மாத இறுதியில் நாட்டில் செயலில் உள்ள கடன் அட்டைகளின் எண்ணிக்கை 1,973,481 ஆகும்.

1ம் ஆண்டு நினைவஞ்சலி
15ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்