பலஸ்தீன் விவகாரத்தில் மௌனம் காக்கும் உலக நாடுகள் : குற்றம் சாட்டும் இலங்கைக்கான பலஸ்தீன தூதுவர்

Israel Palestine Israel-Hamas War
By Eunice Ruth Oct 27, 2023 02:37 PM GMT
Eunice Ruth

Eunice Ruth

in சமூகம்
Report

பலஸ்தீன் மீது இஸ்ரேல் மேற்கொள்ளும் தாக்குதல்களுக்கு எதிராக சர்வதேச மனித உரிமைகள் சட்டம் ஏன் இதுவரை நடைமுறைப்படுத்தப்படவில்லை என இலங்கைக்கான பலஸ்தீன் தூதுவர் கலாநிதி. ஸுஹைர் எம். எச். செயிட் கேள்வியெழுப்பியுள்ளார்.

சர்வதேச மனித உரிமைகள் சட்டத்தை நடைமுறைப்படுத்தும் அமைப்புக்கள் மற்றும் சில சர்வதேச நாடுகள், பலஸ்தீன் எதிர்நோக்கும் நிலை தொடர்பில் கருத்து வெளியிடாது தொடர்ந்தும் மௌனம் காப்பதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

கொழும்பில் உள்ள இலங்கைக்கான பலஸ்தீன தூதரகத்தில் இன்று நடைபெற்ற ஊடக சந்திப்பில் உரையாற்றும் போதே, கலாநிதி. ஸுஹைர் எம். எச். செயிட் இதனை தெரிவித்துள்ளார்.

போர் பிரகடனம் செய்த இஸ்ரேல்

பலஸ்தீனுக்கு எதிராக இஸ்ரேல் போர் பிரகடனம் செய்துள்ளமை பாரிய குற்றச்செயல் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

பலஸ்தீன் விவகாரத்தில் மௌனம் காக்கும் உலக நாடுகள் : குற்றம் சாட்டும் இலங்கைக்கான பலஸ்தீன தூதுவர் | International Countries Silence Palestine Israel

பல நாட்களாக இரகசியமாக காக்கப்பட்டு வந்த விடயத்தை தற்போது இஸ்ரேல் அரசாங்கம் பகிரங்கமாக அறிவித்துள்ளதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

இஸ்ரேலின் இந்த நடவடிக்கை அதன் உண்மை முகத்தை வெளிக்காட்டியுள்ளதாக அவர் கூறியுள்ளார்.

பலஸ்தீன் மக்களுக்கு ஆதரவாக கல்முனை வாழ் மக்களின் போராட்டம்(படங்கள்)

பலஸ்தீன் மக்களுக்கு ஆதரவாக கல்முனை வாழ் மக்களின் போராட்டம்(படங்கள்)

காசாவை குறிவைக்கும் இஸ்ரேல்

குறிப்பாக காசாவை குறிவைத்து இஸ்ரேல் பல தாக்குதல்களை மேற்கொண்டுள்ளதாகவும் இதனால், அத்தியாவசிய தேவைகளான மின்சாரம், உணவு உள்ளிட்ட அனைத்தையும் குறித்த பகுதியில் உள்ள மக்கள் இழந்துள்ளதாக கலாநிதி. ஸுஹைர் எம். எச். செயிட் சுட்டிக்காட்டியுள்ளார்.

பலஸ்தீன் விவகாரத்தில் மௌனம் காக்கும் உலக நாடுகள் : குற்றம் சாட்டும் இலங்கைக்கான பலஸ்தீன தூதுவர் | International Countries Silence Palestine Israel

குறித்த பகுதியில் வாழும் மக்கள் நீண்ட காலமாக சிறை பிடிக்கப்பட்டுள்ளதாகவும் அவர்களது எதிர்காலம் முற்றிலும் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

அத்துடன், காசாவின் நிலை மிகவும் பரிதாபகரமானதாக தற்போது மாறியுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.

மௌனம் காக்கும் சர்வதேசம்

பலஸ்தீன் மீது இஸ்ரேல் மேற்கொள்ளும் தாக்குதல்கள் குறித்து சில நாடுகள் தொடர்ந்தும் மௌனம் காப்பதாகவும் குறித்த தரப்பினர் குருடர்களை போல் நடந்து கொள்வதாகவும் இலங்கைக்கான பலஸ்தீன் தூதுவர் குற்றம் சாட்டியுள்ளார்.

அத்துடன், பலஸ்தீனர்கள் மனிதர்கள் இல்லையா எனவும் அவர்களது உயிருக்கு மதிப்பில்லையா எனவும் அவர் கேள்வியெழுப்பியுள்ளார்.

பலஸ்தீன் விவகாரத்தில் மௌனம் காக்கும் உலக நாடுகள் : குற்றம் சாட்டும் இலங்கைக்கான பலஸ்தீன தூதுவர் | International Countries Silence Palestine Israel

மேலும், பலஸ்தீன் ஏற்கனவே சமரசத்துக்கு இணக்கம் தெரிவித்திருந்ததையும் அவர் நினைவூட்டியுள்ளார்.

இஸ்ரேலுக்கு எதிராக பலஸ்தீன் எந்தவொரு குற்ற நடவடிக்கையையும் மேற்கொள்ளவில்லை எனவும் இதனை உலக நாடுகளும் சர்வதேச அமைப்புக்களும் நன்கு நினைவில் கொள்ள வேண்டும் எனவும் கலாநிதி. ஸுஹைர் எம். எச். செயிட் மேலும் தெரிவித்துள்ளார்.   

பலஸ்தீனத்தில் விரைவில் அமைதி நிலை திரும்ப வேண்டும் : அமைச்சர் ஜீவன் தொண்டமான்

பலஸ்தீனத்தில் விரைவில் அமைதி நிலை திரும்ப வேண்டும் : அமைச்சர் ஜீவன் தொண்டமான்

ReeCha
1ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 5ம் வட்டாரம், கொழும்பு

17 Apr, 2025
மரண அறிவித்தல்

இளவாலை, தெஹிவளை

15 Apr, 2025
மரண அறிவித்தல்
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், கலிஃபோர்னியா, United States

16 Apr, 2020
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஓட்டுமடம், புங்குடுதீவு 6ம் வட்டாரம், திருச்சி, India, Toronto, Canada

17 Apr, 2015
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மண்டைதீவு, பேர்லின், Germany, Markham, Canada

28 Apr, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மாமடு, கணுக்கேணி மேற்கு, Brampton, Canada

29 Apr, 2024
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

மந்துவில் கிழக்கு, மீசாலை வடக்கு, தாவளை

21 Mar, 2025
11ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் மேற்கு, பிரான்ஸ், France

18 Apr, 2020
மரண அறிவித்தல்

பரந்தன், துன்னாலை, திக்கம்

16 Apr, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 7ம் வட்டாரம், கிளிநொச்சி, Brampton, Canada

16 Apr, 2024
மரண அறிவித்தல்

யாழ் அச்சுவேலி தெற்கு, Jaffna, Chur, Switzerland

16 Apr, 2025
மரண அறிவித்தல்
5ம் ஆண்டு நினைவஞ்சலி

நீர்வேலி மேற்கு

13 Apr, 2020
5ம் ஆண்டு நினைவஞ்சலி

நல்லூர், Epsom, United Kingdom

16 Apr, 2020
10ம் ஆண்டு நினைவஞ்சலி
25ம் ஆண்டு நினைவஞ்சலி

பண்டத்தரிப்பு, Spiez, Switzerland

17 Apr, 2000
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 8ம் வட்டாரம், சுவிஸ், Switzerland

20 Apr, 2024
4ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு மேற்கு, வன்னேரிக்குளம், உருத்திரபுரம்

17 Apr, 2021
மரண அறிவித்தல்

முல்லைத்தீவு, Birmingham, United Kingdom

07 Apr, 2025
மரண அறிவித்தல்

வல்வெட்டித்துறை கம்பர்மலை, பரந்தன், London, United Kingdom

11 Apr, 2025
மரண அறிவித்தல்

கரவெட்டி, London, United Kingdom

06 Apr, 2025
மரண அறிவித்தல்

கோண்டாவில் கிழக்கு, Paris, France

11 Apr, 2025
12ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், கனடா, Canada

15 Apr, 2013
மரண அறிவித்தல்

புங்குடுதீவு, வட்டக்கச்சி, பிரான்ஸ், France

11 Apr, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கொடிகாமம், Greenford, United Kingdom

15 Apr, 2020
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கரணவாய், Buchs, Switzerland

18 Apr, 2024
மரண அறிவித்தல்

கொழும்பு, Herne, Germany, Datteln, Germany

12 Apr, 2025
மரண அறிவித்தல்

அனலைதீவு, வட்டக்கச்சி இராமநாதபுரம், Brampton, Canada

08 Apr, 2025
2ம் ஆண்டு நினைவஞ்சலி

அம்பனை, Eastham, United Kingdom, London, United Kingdom

15 Apr, 2023
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 12ம் வட்டாரம், Drancy, France

15 Apr, 2023
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, வட்டக்கச்சி, Ottawa, Canada

25 Apr, 2024
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 2ம் வட்டாரம், பேர்லின், Germany

04 Apr, 2025