தமிழர் தரப்பு மீதான சிறிலங்கா படைகளின் அடக்குமுறை: கேள்விக்குட்படுத்தும் சர்வதேசம்!

Human Rights Commission Of Sri Lanka Sri Lankan Tamils Sri Lanka World
By Raghav Aug 20, 2025 12:33 PM GMT
Report

சிறிலங்கா பாதுகாப்புப் படையினர், வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் குடும்பங்களைத் துன்புறுத்துவதாகவும், அவர்களுக்கு எதிராகப் பயங்கரவாத தடைச் சட்டத்தைப் பயன்படுத்துவதாகவும் சர்வதேச மனித உரிமைகள் கண்காணிப்பகம் தெரிவித்துள்ளது. 

சர்வதேச மனித உரிமைகள் கண்காணிப்பகத்தின் ஆசிய பிராந்தியத்திற்கான துணை பணிப்பாளர் மீனாட்சி கங்குலி இன்று (20.08.2025) அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தநிலையில் இலங்கையில் இடம்பெற்ற துஷ்பிரயோகங்கள் தொடர்பான ஆதாரங்களை சேகரித்து பகுப்பாய்வு செய்வதற்கும் நிலைமைகளைத் தொடர்ந்து கண்காணிப்பதற்கும் ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவை இலங்கை தொடர்பான தீர்மானங்களை புதுப்பிக்க வேண்டும் என்றும் அந்த அறிக்கையில் வலியுறுத்தப்பட்டுள்ளது. 

யாழ். மாவட்ட பாடசாலைகளுக்கு நாளை விசேட விடுமுறை

யாழ். மாவட்ட பாடசாலைகளுக்கு நாளை விசேட விடுமுறை

மனித உரிமைகள் கண்காணிப்பகம் 

அத்துடன் ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க, உரிமைகளை மதிக்கும் கொள்கைகளை ஏற்றுக் கொள்வதாக உறுதியளித்த போதிலும் அவை மிகக் குறைவாகவே உள்ளதாகவும் சர்வதேச மனித உரிமைகள் கண்காணிப்பகம் தெரிவித்துள்ளது. 

தமிழர் தரப்பு மீதான சிறிலங்கா படைகளின் அடக்குமுறை: கேள்விக்குட்படுத்தும் சர்வதேசம்! | International Human Rights Watch Report

காணாமல் ஆக்கப்பட்டவர்களின் குடும்பங்கள் தொடர்ந்தும் அச்சுறுத்தல்களை எதிர்கொள்வதுடன், இலங்கையில் நீதிக்கான வாய்ப்புகள் எப்போதும் குறைவாகவே உள்ளன என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

அதேநேரம், ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் உயர்ஸ்தானிகர் வோல்கர் டர்க், அண்மையில் இலங்கைக்கு விஜயம் மேற்கொண்டு செம்மணி மனித புதைகுழியைப் பார்வையிட்டமை தொடர்பில் சர்வதேச மனித உரிமைகள் கண்காணிப்பகத்தின் அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. 

இந்தநிலையில் குறித்த விடயத்தில் உண்மையை வெளிக்கொணரக் கூடிய தடயவியல் நிபுணத்துவம் வாய்ந்த சுயாதீன விசாரணைகள் நடத்தப்பட வேண்டும் என்றும், சர்வதேச மனித உரிமைகள் கண்காணிப்பகம் வலியுறுத்தியுள்ளது.

நாடாளுமன்ற வளாகத்தில் உயிர்மாய்த்த எம்.பி

நாடாளுமன்ற வளாகத்தில் உயிர்மாய்த்த எம்.பி

சிறிலங்கா பாதுகாப்புப் படை

பல தசாப்தங்களாக இலங்கையில் சுமார் 20 மனித புதைகுழிகள் அடையாளம் காணப்பட்டுள்ள நிலையில், அவை தொடர்பில் எப்போதும் விசாரணைகள் இடம்பெறவில்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. 

தமிழர் தரப்பு மீதான சிறிலங்கா படைகளின் அடக்குமுறை: கேள்விக்குட்படுத்தும் சர்வதேசம்! | International Human Rights Watch Report

இந்த பின்னணியில், பாதிக்கப்பட்டவர்களின் குடும்பங்களையும் மனித உரிமைகள் பாதுகாவலர்களையும் புலனாய்வு அமைப்புகள் அச்சுறுத்தும் சம்பவங்கள் பதிவாகியுள்ளன. 

சிறுபான்மை சமூகங்களைச் சேர்ந்தவர்களை தன்னிச்சையாகத் தடுத்து வைக்கவும் துன்புறுத்துவதற்கும் இலங்கை அதிகாரிகள் பயங்கரவாத எதிர்ப்பு அதிகாரங்களைப் பயன்படுத்துவதாகவும் சர்வதேச மனித உரிமைகள் கண்காணிப்பகத்தின் ஆசிய பிராந்தியத்திற்கான துணை பணிப்பாளர் மீனாட்சி கங்குலி விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ரிஷாட் பதியுதீனை எச்சரித்துள்ள முக்கிய புள்ளி: எதிர்க்கட்சிகளுக்குள் வெடிக்கும் மோதல்!

ரிஷாட் பதியுதீனை எச்சரித்துள்ள முக்கிய புள்ளி: எதிர்க்கட்சிகளுக்குள் வெடிக்கும் மோதல்!

கட்டுநாயக்கவிற்கு வந்த வழியே திருப்பி அனுப்பபட்ட வெளிநாட்டவர் ஐவர்!

கட்டுநாயக்கவிற்கு வந்த வழியே திருப்பி அனுப்பபட்ட வெளிநாட்டவர் ஐவர்!

 செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...!  


ReeCha
மரண அறிவித்தல்

இருபாலை, Swansea, United Kingdom

04 Mar, 2026
மரண அறிவித்தல்

கோண்டாவில், London, United Kingdom

11 Mar, 2026
மரண அறிவித்தல்

மாதகல், London, United Kingdom

15 Mar, 2026
மரண அறிவித்தல்

நயினாதீவு 7ம் வட்டாரம், கொக்குவில்

14 Mar, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், தெஹிவளை

15 Mar, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

பண்ணாகம், Skanderborg, Denmark

16 Mar, 2025
13ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், கனடா, Canada

17 Mar, 2013
10ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு மேற்கு, இளவாலை முள்ளானை, துணுக்காய்

16 Mar, 2016
2ம் ஆண்டு நினைவஞ்சலி

அளவெட்டி, மானிப்பாய், திருகோணமலை

17 Mar, 2024
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, கனடா, Canada

16 Mar, 2025
மரண அறிவித்தல்

நெடுந்தீவு, உருத்திரபுரம்

14 Mar, 2026
16ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், பிரான்ஸ், France

16 Mar, 2010
5ம் ஆண்டு நினைவஞ்சலி
9ம் ஆண்டு நினைவஞ்சலி

அளவெட்டி, பாண்டியன்தாழ்வு

26 Mar, 2017
15ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை கிழக்கு, வெள்ளவத்தை கொழும்பு

29 Mar, 2011
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 11ம் வட்டாரம், புங்குடுதீவு 10ம் வட்டாரம், சுவிஸ், Switzerland, கொழும்பு

12 Mar, 2026
மரண அறிவித்தல்

சுண்டுக்குழி, London, United Kingdom

28 Feb, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
மரண அறிவித்தல்

Kuala Lumpur, Malaysia, நாரந்தனை, Grevenbroich, Germany

10 Mar, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, Langenthal, Switzerland

13 Mar, 2023