செம்மணி மனிதப் புதைகுழிக்கு சர்வதேச நீதி கோரி யாழில் பேரணி!
செம்மணி மனிதப் புதைகுழி தொடர்பான விசாரணைகளை சர்வதேச சமூகம் முன்னெடுக்க வேண்டும் என கோரி யாழ்ப்பாணத்தில் பேரணியொன்று முன்னெடுக்கப்படவுள்ளது.
நாளைய தினம் (12) நல்லூர் பகுதியில் அமைந்துள்ள, ஐக்கிய நாடுகள் அலுவலகத்திற்கு அருகில் இருந்து ஆரம்பமாகவுள்ள பேரணி கிட்டுப்பூங்கா பகுதியில் நிறைவடையவுள்ளது.
செம்மணி மனிதப் புதைகுழியில் இருந்து 583 மனித என்புக்கூடுகளும், சான்றுப் பொருட்களும் மீட்கப்பட்டுள்ளன.
துண்டுப் பிரசுரங்கள் விநியோகம்
அவை தொடர்பில் சர்வதேச விசாரணைகள் முன்னெடுக்கப்பட வேண்டும் எனவும் இலங்கையில் நடைபெற்றது இனப்படுகொலை என்பதற்கான சான்றாக செம்மணி மனிதப் புதைகுழி காணப்படுகின்றதாகவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

இந்தநிலையில் அது தொடர்பில் சர்வதேச விசாரணை முன்னெடுக்க வேண்டும் என கோரியே பேரணி நடைபெறவுள்ளது.
குறித்த பேரணிக்கு ஆதரவு கோரி தமிழ் தேசிய பேரவையினாரால் நேற்றைய தினம் (11) சனிக்கிழமை துண்டுப் பிரசுரங்கள் விநியோகிக்கப்பட்டன.
இதில் நாடாளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம், பருத்தித்துறை நகர பிதா டக்ளஸ் போல், தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் முக்கியஸ்தர்கள் என பலர் கலந்து கொண்டு, வர்த்தகர்கள் மற்றும் மக்களுக்கு துண்டுப் பிரசுரங்களை வழங்கியமை குறிப்பிடத்தக்கது.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |