103 குற்றவாளிகளைக் கண்டுபிடிக்க இன்டர்போல் அறிவிப்பு!
By Dilakshan
வெளிநாடுகளில் தஞ்சம் புகுந்த 103 குற்றவாளிகளைக் கண்டுபிடிப்பதற்காக இன்டர்போல் சிவப்பு அறிவிப்புகள் பிறப்பிக்கப்பட்டுள்ளதாக இலங்கை காவல்துறை அறிவித்துள்ளது.
இந்த ஆண்டு தப்பியோடிய மூன்று பேர் ஏற்கனவே நாட்டிற்கு திருப்பி அனுப்பப்பட்டுள்ளதாக காவல்துறை செய்தித் தொடர்பாளர் ஏஎஸ்பி எஃப்.யு. வுட்லர் உறுதிப்படுத்தியுள்ளார்.
நாடுகடந்த குற்றங்களைத் தடுப்பதற்கான தொடர்ச்சியான முயற்சிகளின் ஒரு பகுதியாக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
சொத்துக்கள் பறிமுதல்
அதன்படி, வெளிநாடுகளுக்குத் தப்பிச் சென்ற குற்றவாளிகளின் ரூ. 50 மில்லியன் மதிப்புள்ள சொத்துக்களையும் அதிகாரிகள் பறிமுதல் செய்துள்ளதாக அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்..! |
1ம் ஆண்டு நினைவஞ்சலி