கஞ்சிபானி இம்ரானை இன்டர்போலின் உதவியுடன் அழைத்துவர நடவடிக்கை
கொலை மற்றும் போதைப்பொருள் கடத்தல் உள்ளிட்ட பல கடுமையான குற்றங்கள் தொடர்பாக தற்போது வெளிநாட்டில் தலைமறைவாக உள்ள பாதாள உலகத் தலைவரான கஞ்சிபானி இம்ரானை நாட்டிற்குக் அழைத்து வருவதற்கான நடவடிக்கைகள் தொடங்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இன்டர்போலின் உதவியுடன் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
கஞ்சிபானி இம்ரான் சர்வதேச பாதாள உலகக் குழுக்களுடன் இணைந்து இந்த நாட்டில் ஏராளமான பாதாள உலகச் செயல்பாடுகளை நடத்தியதோடு, பெரிய அளவில் போதைப்பொருள் கடத்தலிலும் ஈடுபட்டு வருவதற்கான ஆதாரங்களைக் குற்றப் புலனாய்வுத் துறை கண்டறிந்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பயங்கரவாதக் குழுக்களுடன் தொடர்பு
இந்தியா, பாகிஸ்தான் மற்றும் அல்ஜீரியாவைத் தளமாகக் கொண்ட பயங்கரவாதக் குழுக்களுடன் தொடர்பில் இருப்பதாகவும், அந்தப் பயங்கரவாத வலையமைப்புகளின் ஆதரவுடன் நாட்டில் போதைப்பொருள் கடத்தலை நடத்தவும், எதிர்க்கட்சிகளைக் குறிவைத்து படுகொலைத் திட்டங்களைச் செயல்படுத்தவும் பாதாள உலக ஒழிப்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ள ஒரு மூத்த காவல்துறை அதிகாரியை மேற்கோள்காட்டி தென்னிலங்கை ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.

அவரைக் கைது செய்வதற்காக இன்டர்போல் மூலம் ஏற்கனவே சிவப்பு அறிவிப்புகள் விடுக்கப்பட்டிருந்தபோதிலும், அவர் தொடர்ந்து கைது நடவடிக்கையில் இருந்து தப்பித்து, தனது குற்றச் செயல்களைத் தொடர்வதாக தெரிவிக்கப்படுகிறது.
இந்நிலையில் அவரை கைது செய்ய விசேட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக தெரிவிக்கப்படுகிறது.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |