துபாயில் கைது செய்யப்பட்ட பெண்! CID விசாரணையில் அம்பலமான தகவல்

CID - Sri Lanka Police Sri Lanka Police Investigation
By Dharu Jan 19, 2026 04:55 AM GMT
Report

சர்வதேச சிவப்பு பிடியாணையின் கீழ் துபாயில் கைது செய்யப்பட்ட இரண்டு பாதாள உலக குற்றவாளிகளும், பெரிய அளவிலான நிதி மோசடியில் ஈடுபட்ட ஒரு பெண்ணும் கடந்த 16 ஆம் திகதி துபாயிலிருந்து இலங்கைக்கு அழைத்து வரப்பட்டனர்.

அழைத்து வரப்பட்ட பெண் கொழும்பு குற்றப் பிரிவின் (CCD) முன்னாள் காவல்துறை பொறுப்பதிகாரி ஒருவரின் மனைவி என்பதை குற்றப் புலனாய்வுத் துறை உறுதிப்படுத்தியுள்ளது.

கல்கிஸ்ஸை, ரத்மலானையில் வசிக்கும் 56 வயதான நிஷாமணி டி சில்வா என்ற இந்தப் பெண், 2014 ஆம் ஆண்டு வெளிநாட்டு தூதரகத்தில் பணிபுரிந்தபோது செய்யப்பட்ட நிதி மோசடியில் ஈடுபட்டதாகக் குற்றம் சாட்டப்பட்டுள்ளார்.

2,000 ரூபாய் பணத்தாளின் முக்கிய பாதுகாப்பு அம்சங்கள்

2,000 ரூபாய் பணத்தாளின் முக்கிய பாதுகாப்பு அம்சங்கள்

சிறைத்தண்டனை மற்றும் அபராதம்

அரசாங்க நிதியிலிருந்து சுமார் ஒரு மில்லியன் ரூபாய் மோசடி செய்ததற்காக கொழும்பு உயர் நீதிமன்றத்தால் அவர் குற்றவாளி என நிரூபிக்கப்பட்டு சிறைத்தண்டனை மற்றும் அபராதம் விதிக்கப்பட்ட போதிலும், அவர் சட்டத்தைத் தவிர்த்து நீண்ட காலமாக துபாயில் தலைமறைவாக இருந்து வந்துள்ளார்.

துபாயில் கைது செய்யப்பட்ட பெண்! CID விசாரணையில் அம்பலமான தகவல் | Interrogation Of Woman Arrested In Dubai

சந்தேக நபர் துபாய் காவல்துறையால் கைது செய்யப்பட்டபோது, ​​அவரது கணவரான தலைமை காவல்துறை பரிசோதகரும் பணியில் இருந்து இடைநீக்கம் செய்யப்பட்டதாக காவல்துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

வெலிகமவில் உள்ள W 15 ஹோட்டலில் நடந்த துப்பாக்கிச் சூடு சம்பவத்தில் தொடர்புடைய குழுவை வழிநடத்தியதற்காக அவர் இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளார்.

அதே நேரத்தில் அவரது மனைவி வெளிநாட்டில் தலைமறைவாக இருந்தார். அவருடன் நாட்டுக்கு அழைத்து வரப்பட்ட பாதாள உலகக் குழு உறுப்பினர் 52 வயதான ரவீன் சமிந்த வீரசிங்க அல்லது 'புஞ்சா' ஆவார்.

இவர் கந்தானை பகுதியைச் சேர்ந்தவர். கடந்த ஆண்டு ஜூலை மாதம் முன்னாள் அமைச்சர் மங்கள சமரவீரவின் செயலாளர் சமீராவை சுட்டுக் கொன்ற சம்பவத்தில் தேடப்பட்டு வந்த முக்கிய சந்தேக நபராவார்.

துறைமுகத்தில் தேங்கியுள்ள ஆயிரத்திற்கும் மேற்பட்ட உப்பு கொள்கலன்கள்

துறைமுகத்தில் தேங்கியுள்ள ஆயிரத்திற்கும் மேற்பட்ட உப்பு கொள்கலன்கள்

மேலதிக விசாரணை

இந்த துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் கொல்லப்பட்டார். சந்தேக நபர் தற்போது மேலதிக விசாரணைக்காக களனி காவல் துறையிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளார்.

துபாயில் கைது செய்யப்பட்ட பெண்! CID விசாரணையில் அம்பலமான தகவல் | Interrogation Of Woman Arrested In Dubai

மற்றைய சந்தேக நபரான கிரியல்தெனியகே டான் ரசிக சஞ்சீவ குமார அல்லது 'உரகஹ சுட்டி மல்லி' என்பவர் எல்பிட்டிய மற்றும் உரசமன்ஹந்திய பகுதிகளில் ஒழுங்கமைக்கப்பட்ட குற்றங்களில் ஈடுபட்ட ஒருவர் என்று காவல்துறையினர் தெரிவிக்கின்றனர்.

முப்பது வயதான இந்த நபர் பல போதைப்பொருள் கடத்தல் மற்றும் மிரட்டி பணம் பறித்தல் வழக்குகளில் தொடர்புடையவர் என்பதுடன், மேலதிக விசாரணைக்காக எல்பிட்டிய காவல் துறையிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளார்.

   செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...!
ReeCha
மரண அறிவித்தல்

நெல்லியடி, India, Toronto, Canada

16 Sep, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

மயிலிட்டி தெற்கு, உரும்பிராய் தெற்கு

24 Sep, 2020
மரண அறிவித்தல்

மல்லாகம், யாழ்ப்பாணம், கொழும்புத்துறை, சுண்டுக்குழி, Brampton, Canada

12 Sep, 2026
நன்றி நவிலல்

வளலாய், Scarborough, Canada

16 Aug, 2026
நன்றி நவிலல்
நன்றி நவிலல்

மீசாலை, Toronto, Canada

17 Aug, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் கிழக்கு, Toronto, Canada

11 Oct, 2021
நன்றி நவிலல்

சாவகச்சேரி, Epsom, United Kingdom

18 Aug, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சங்கானை, திருநெல்வேலி, Markham, Canada

28 Sep, 2025
11ம் ஆண்டு நினைவஞ்சலி

மண்டைதீவு, பரவிப்பஞ்சான்

18 Sep, 2015
மரண அறிவித்தல்

கட்டுவன், Southend-on-Sea, United Kingdom

09 Sep, 2026
மரண அறிவித்தல்

காரைநகர் தங்கோடை, Brampton, Canada

14 Sep, 2026
அகாலமரணம்
மரண அறிவித்தல்

இளவாலை மாரீசன்கூடல், Gennevilliers, France

11 Sep, 2026
மரண அறிவித்தல்

மட்டக்களப்பு, Böblingen, Germany

14 Sep, 2026
36ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

சரவணை, கோண்டாவில் மேற்கு

14 Sep, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

காங்கேசன்துறை, கனடா, Canada

15 Sep, 2016
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

மண்டைதீவு, London, United Kingdom

17 Aug, 2026
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, ஆனைக்கோட்டை, Frankfurt, Germany

14 Sep, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்