குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்டால் முழு அரசியலிலிருந்தும் விலக தயார்: பந்துல குணவர்தன சவால்

Bandula Gunawardane Sri Lanka
By Beulah Sep 15, 2023 04:59 AM GMT
Report

“புகையிரத பாதையை புனரமைக்கும் இந்திய நிறுவனத்திடமிருந்து நான் 5 கோடி ரூபா இலஞ்சம் பெற்றதாக புகையிரத சேவை சங்கத்தின் தலைவர் என்று குறிப்பிட்டுக் கொள்ளும் இந்திக தொடங்கொட என்பவர் முன்வைத்துள்ள குற்றச்சாட்டு பொய்களின் திணிப்பு”

இவ்வாறு போக்குவரத்து,நெடுஞ்சாலைகள் அபிவிருத்தி மற்றும் ஊடகத்துறை அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார்.

அரசாங்க தகவல் திணைக்களத்தின் காரியாலயத்தில் நேற்று(14) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.

பந்துல குணவர்தனவின் அறிவிப்பு - வெறிச்சோடிப்போயுள்ள தென்னிலங்கை!

பந்துல குணவர்தனவின் அறிவிப்பு - வெறிச்சோடிப்போயுள்ள தென்னிலங்கை!

புகையிரத சாரதிகள் பணிப்புறக்கணிப்பு

இதுதொடர்பில் மேலும் அவர் தெரிவிக்கையில்,

குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்டால் முழு அரசியலிலிருந்தும் விலக தயார்: பந்துல குணவர்தன சவால் | Intika Totankota Bandula Gunawardane Bribery Sl

“புகையிரத சாரதிகள் சங்கத்தில் ஒரு தரப்பினரை தூண்டி விட்டு அவர்களை பணிப்புறக்கணிப்பில் ஈடுபட வைத்த இந்திக தொடங்கொட புகையிரத சேவை சங்கத்தில் எவ்வித பதவிகளையும் வகிக்கவில்லை.

புகையிரத சாரதிகள் சங்கத்தின் கோரிக்கைகளுக்கு அடிபணியாமல் போராட்டத்தை முடிவுக்கு கொண்டு வந்தவுடன் இந்திக தொடங்கொட என்னை கடுமையாக சாடியுள்ளார்.

இலங்கை புகையிர திணைக்களத்தின் முக்கிய அறிவிப்பு

இலங்கை புகையிர திணைக்களத்தின் முக்கிய அறிவிப்பு

இலங்கை அரசியலில் என்னை போல் (பந்துல குணவர்தன) மிக மோசமான போக்குவரத்து அமைச்சர் எவரும் இல்லை என்றும், நானும் எனது மனைவியும் தம்பதிவ யாத்திரை செல்ல வெளிநாட்டு தரப்பினர் நிதியுதவி வழங்கியதாகவும் புகையிரத பாதையை புனரமைக்கும் இந்திய நிறுவனத்தின் பிரதிநிதிகள் எனது வீட்டுக்கு வந்து 5 கோடி ரூபா இலஞ்சம் வழங்கியதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

இந்த குற்றச்சாட்டுக்கள் பொய்களின் திணிப்பு என்பதுடன் வன்மையாக இந்த குற்றச்சாட்டுக்களை நிராகரிக்கிறேன்.

பின்ணனி

புகையிரத சாரதிகள் சங்கத்தின் பணிப்புறக்கணிப்பு போராட்டத்தை முடிவுக்கு கொண்டு வந்த பின்னர் தான் இவர் இவ்வாறான போலியான குற்றச்சாட்டுக்களை முன்வைத்துள்ளார்.

குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்டால் முழு அரசியலிலிருந்தும் விலக தயார்: பந்துல குணவர்தன சவால் | Intika Totankota Bandula Gunawardane Bribery Sl

புகையிரத சாரதிகள் சங்கத்தினர் முன்வைத்த கோரிக்கைகளை நிறைவேற்றுவதற்கு அமைச்சு மற்றும் புகையிரத திணைக்கள மட்டத்தில் முன்னெடுக்கப்பட்ட நடவடிக்கைகளை புகையிரத சாரதிகள் சங்கத்தின் பிரதிநிதிகளிடம் எடுத்துரைத்தேன்.

முன்வைக்கப்பட்ட கோரிக்கைகளுக்கு போக்குவரத்து அமைச்சினால் மாத்திரம் தனித்து தீர்மானம் எடுக்க முடியாது.

அரச சேவைகள் ஆணைக்குழுவின் அனுமதியுடன் தான் முரண்பட்ட வகையில் தீர்வு காண முடியும் என்பதை தெளிவாக எடுத்துரைத்தேன்.

இவ்வாறான நிலையில் தான் புகையிரத சாரதிகள் சங்கத்தினர் கடந்த திங்கட்கிழமை நள்ளிரவு முதல் பணிப்புறக்கணிப்பு போராட்டத்தில் ஈடுபட்டார்கள்.

புகையிரத சாரதிகள் சங்கத்தின் 84 பேரின் பணிப்புறக்கணிப்பினால் புகையிரத சேவை முழுமையாக ஸ்தம்பிதமடையவில்லை.

இந்திய கடனுதவி

பணிப்புறக்கணிப்பு போராட்டத்தை முன்னின்று செயற்படுத்திய இந்திக தொடங்கொட எனக்கு எதிராக பொய்யான குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார்.

குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்டால் முழு அரசியலிலிருந்தும் விலக தயார்: பந்துல குணவர்தன சவால் | Intika Totankota Bandula Gunawardane Bribery Sl

புகையிரத சேவையில் உள்ள இந்திக தொடங்கொடவுக்கு எதிராக மேலதிக கொடுப்பனவில் மோசடி செய்த குற்றச்சாட்டு தொடர்பில் அமைச்சு மட்டத்திலும்,மிலேனியம் புகையிரத செயற்திட்ட மோசடி தொடர்பில் குற்றப்புலனாய்வு பிரிவிலும் விசாரணைகள் முன்னெடுக்கப்படுகிறது.

இவ்வாறான நிலையில் தான் இவர் எனக்கு எதிராக குற்றச்சாட்டுக்களை முன்வைத்துள்ளார்.

போக்குவரத்து அமைச்சராக நான் பதவியேற்றதன் பின்னர் இந்திய நிறுவனத்துடன் எந்த அபிவிருத்தி திட்ட ஒப்பந்தங்களையும் முன்னெடுக்கவில்லை.

இந்திய கடனுதவி திட்டத்தின் கீழ் புகையிரத பாதை அபிவிருத்தி செய்யப்படுகிறது.

அத்துடன் நிதி விவகாரங்கள் இந்திய நிதியமைச்சுக்கும்,இலங்கையின் நிதியமைச்சுக்கும் இடையில் மாத்திரம் முன்னெடுக்கப்படுகிறது.

5 கோடி ரூபா நட்டஈடு பெற்றதாக முன்வைத்துள்ள குற்றச்சாட்டுக்கு எதிராக குற்றப்புலனாய்வு, பிரிவிலும்,இலஞ்ச ஊழல் ஒழிப்பு ஆணைக்குழுவிலும் முறைப்பாடளிப்பேன்.

அதே போல் இலங்கையில் புகையிரத பாதை புனரமைப்பு செயற்திட்டத்தில் ஈடுபடும் இந்திய நிறுவனங்களும் குற்றப்புலனாய்வு பிரிவில் முறைப்பாடளிக்க வேண்டும்.

என்மீது சுமத்தப்பட்டுள்ள குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்டால் அமைச்சு, நாடாளுமன்ற உறுப்பினர் ஆகிய பதவிகளில் இருந்து விலகுவதுடன்,முழு அரசியல் செயற்பாடுகளிலும் இருந்து விலகுவேன்” என்றார். 

ReeCha
மரண அறிவித்தல்

புலோலி கிழக்கு, Toronto, Canada

06 Oct, 2025
16ம் ஆண்டு நினைவஞ்சலி

கோண்டாவில், கனடா, Canada

11 Oct, 2009
1ம் ஆண்டு நினைவஞ்சலி

 துன்னாலை தெற்கு, Brampton, Canada

12 Oct, 2024
மரண அறிவித்தல்

ஓட்டுமடம், Walthamstow, United Kingdom

09 Oct, 2025
மரண அறிவித்தல்

கொழும்பு, London, United Kingdom

03 Oct, 2025
மரண அறிவித்தல்

உரும்பிராய், ஜேர்மனி, Germany

06 Oct, 2025
மரண அறிவித்தல்

அல்வாய் தெற்கு, Montreuil, France, London, United Kingdom

25 Sep, 2025
மரண அறிவித்தல்

நாயன்மார்கட்டு, சுன்னாகம்

09 Oct, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Langenthal, Switzerland

12 Oct, 2020
6ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

நெல்லியடி, London, United Kingdom

03 Oct, 2025
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

கொழும்புத்துறை

10 Oct, 2025
மரண அறிவித்தல்

உடுவில், London, United Kingdom

03 Oct, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி
2ம் ஆண்டு நினைவஞ்சலி

உடுத்துறை, ஆழியவளை, வல்வெட்டித்துறை, Toronto, Canada

10 Oct, 2023
1ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

குப்பிளான், உரும்பிராய்

05 Oct, 2020
15ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கரவெட்டி, நெல்லியடி

10 Sep, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

யாழ்ப்பாணம், ரோம், Italy, Dortmund, Germany

11 Sep, 2025
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

Frauenfeld, Switzerland, Weinfelden, Switzerland

09 Oct, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டுவில் வடக்கு, Harrow, United Kingdom

10 Oct, 2024
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 5ம் வட்டாரம், Lampertheim, Germany

12 Sep, 2025
மரண அறிவித்தல்

சங்கரத்தை, யாழ்ப்பாணம், சிட்னி, Australia

06 Oct, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

Ipoh, Malaysia, கொக்குவில், கோயம்புத்தூர், India, New Jersey, United States

09 Sep, 2025
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, Markham, Canada

06 Oct, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கரவெட்டி, London, United Kingdom

07 Sep, 2025