வாகன உரிமையாளர்களுக்கு நற்செய்தி! அறிமுகமாகவுள்ள புதிய வசதி
மோட்டார் போக்குவரத்து திணைக்களம் தனது தற்போதைய கணினி அமைப்பை நவீனப்படுத்திய பிறகு, வாகன உரிமையாளர்களின் பெயர்களைக் கொண்ட தனிப்பயனாக்கப்பட்ட வாகன இலக்கத் தகடுகளை அறிமுகப்படுத்தத் திட்டமிட்டுள்ளது.
இது தொடர்பான தகவல்களைப் பொது நிதி பற்றிய நாடாளுமன்றக் குழுவிடம் பகிர்ந்துகொண்ட அதிகாரிகள், தற்போதுள்ள நடைமுறை மிகவும் பழமையானது என்பதால் இத்தகைய புதிய திட்டத்தை உடனடியாகச் செயல்படுத்துவதில் தொழில்நுட்ப ரீதியான சிக்கல்கள் இருப்பதாகத் தெரிவித்துள்ளனர்.
தற்போது இந்த அமைப்பை நவீனமாக்கும் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருவதாகவும், அந்தப் பணிகள் முழுமையாக நிறைவடைந்த பின்னர் இந்தச் சிறப்புத் திட்டம் நடைமுறைக்கு வரும் என்றும் அவர்கள் வலியுறுத்தியுள்ளனர்.
விரைவில் இலங்கைக்கு வரும் வசதி
காலக்கெடு குறித்து கேட்கப்பட்டபோது, கணினி அமைப்பு மேம்படுத்தப்பட்ட ஆறு மாத காலத்திற்குள் தனிப்பயனாக்கப்பட்ட இலக்கத் தகடுகளை வழங்கும் பணிகளைத் தொடங்கிவிட முடியும் என அதிகாரிகள் நம்பிக்கை வெளியிட்டுள்ளனர்.

இதன்படி, வெளிநாடுகளில் நடைமுறையில் இருப்பதைப் போன்றே, வாகன உரிமையாளர்கள் தங்களுக்கு விருப்பமான பெயர்களைத் சூட்டிக்கொள்ளும் இந்த வசதி விரைவில் இலங்கையில் சாத்தியமாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
மனித நாகரிகத்தில் உயிர்நாடியான காடுகள்! 23 மணி நேரம் முன்