சக பெண் ஊழியரிடம் மோசமான முறையில் நடந்து கொண்ட காவல்துறை அதிகாரி!
Sri Lanka Police
SL Protest
Sri Lanka Police Investigation
By pavan
விரும்பத்தகாத செயல்
போராட்டத்தின் போது பெண்ணொருவரின் கழுத்தை பிடித்து அச்சுறுத்திய சிரேஷ்ட காவல்துறை உத்தியோகத்தரின் சேவையை உடனடியாக இடைநிறுத்துமாறு ராஜாங்க அமைச்சர் கீதா குமாரசிங்க கோரிக்கை விடுத்துள்ளார்.
இந்த கோரிக்கையை நேற்று (14) காவல்துறை மா அதிபரிடம் விடுத்துள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.
மக்களை காக்க வேண்டிய சிரேஷ்ட காவல்துறை உத்தியோகத்தர் ஒரு பெண் காவல்துறை உத்தியோகத்தரை மிகவும் விரும்பத்தகாத மற்றும் அவமானகரமான முறையில் கழுத்தைப் பிடித்து அச்சுறுத்தியுள்ளார்.
9,000 பெண்கள்
இந்த செயலுக்கு தாம் மிகவும் வருந்துவதாகவும், கண்டிப்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
தற்போது காவல்துறை சேவையில் சுமார் 9,000 பெண்கள் கடமையாற்றி வருவதாகவும், தாய்மார்கள் இவ்வாறானவற்றை எதிர்பார்த்து தமது பெண் பிள்ளைகளை காவல்துறை சேவைக்கு அனுப்புவதில்லை எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
வெடுக்குநாறி மலையும் வெள்ளை ஈயும் 2 நாட்கள் முன்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
மரண அறிவித்தல்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்