மீண்டும் ஹோர்முஸ் நீரிணை திறப்பு - ஈரானின் புதிய அறிவிப்பு - உற்று நோக்கும் உலகம்
ஹோர்முஸ் நீரிணை ஊடான கடல்வழிப் போக்குவரத்திற்கு இரண்டு வார காலத்திற்கு பாதுகாப்பான பயணத்தை உறுதி செய்வதாக ஈரான் தெரிவித்துள்ளது.
ஈரான் மற்றும் அமெரிக்காவிற்கு இடையிலான இருதரப்பு பேச்சுவார்த்தைகள் ஏப்ரல் 10 ஆம் திகதி முதல் பாகிஸ்தானின் இஸ்லாமாபாத் நகரில் நடைபெறவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
போரை முடிவுக்குக் கொண்டுவருவது தொடர்பில் அமெரிக்காவுடனான பேச்சுவார்த்தைகளுக்கு இந்த இடைநிறுத்தம் பயன்படுத்தப்படும் எனவும் ஈரான் குறிப்பிட்டுள்ளது.
அவமானகரமான பின்வாங்கல்
அமெரிக்கா - ஈரான் இடையிலான இந்தப் போர்நிறுத்தம் லெபனான் உட்பட 'அனைத்து இடங்களுக்கும்' பொருந்தும் என பாகிஸ்தான் பிரதமர் தெரிவித்துள்ளார்.

இதேவேளை, "இன்று இரவு ஒரு முழு நாகரிகமே அழிந்துவிடும்" என்று மிரட்டிய சில மணிநேரங்களுக்குப் பிறகு, அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் புதன்கிழமை அதிகாலையில் அச்சுறுத்தலில் இருந்து பின்வாங்கி, ஈரானுடன் இரண்டு வார கால போர் நிறுத்தத்திற்கு ஒப்புக்கொண்டதாகக் கூறினார்.
பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப் மற்றும் ஃபீல்ட் மார்ஷல் ஆசிம் முனீர் ஆகியோர் முன்வைத்த ஒரு முன்மொழிவை ஏற்றுக்கொண்டதாகக் கூறி ட்ரம்ப் 'ட்ரூத் சோஷியல்' தளத்தில் போர் நிறுத்தத்தை அறிவித்தார்.
போரை முடிவுக்குக் கொண்டு வருவதற்கான ஈரானின் நிபந்தனைகளை ட்ரம்ப் ஏற்றுக்கொண்டதாகக் கூறும் அறிவிப்பை ஈரானிய அரசு தொலைக்காட்சி ஒளிபரப்பியதுடன் அதனை அமெரிக்க ஜனாதிபதியின் "அவமானகரமான பின்வாங்கல்" என்றும் வர்ணித்ததுள்ளது
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |