ஈரானுக்கு இஸ்ரேல் கொடுத்த பதிலடி: ட்ரம்பினால் பொறுமைகாத்த நெதன்யாகு
புதிய இணைப்பு
ஈரானின் போர் நிறுத்த மீறல்களுக்கு பதிலளிக்கும் விதமாக, தெஹ்ரான் அருகே ஒரு ரேடார் வரிசையை இஸ்ரேல் தாக்கியதாக பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவின் அலுவலகம் அறிவித்துள்ளது.
அந்நாட்டு நேரப்படி காலை 07:06 மணிக்கு (BST 05:06) ஈரான் இஸ்ரேல் மீது ஒரு ஏவுகணையையும், காலை 10:25 மணிக்கு மேலும் இரண்டு ஏவுகணைகளையும் வீசியதாக நெதன்யாகுவின் அலுவலகம் ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளது.
எனினும், அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்புடன் இஸ்ரேல் பிரதமர் பேசிய பிறகு இஸ்ரேல் தாக்குதல்களில் இருந்து விலகி இருந்ததாக அறிக்கை கூறுகிறது.
இதேவேளை, ட்ரம்புடனான அழைப்பில், அனைத்து போர் இலக்குகளையும் அடைந்த இஸ்ரேலுக்கு தனது மகத்தான பாராட்டுகளைத் தெரிவித்தாக அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
எவ்வாறாயினும், போர் நிறுத்தம் தொடங்கிய பிறகு ஈரான் தாக்குதல் நடத்தியதாக முன்வைக்கப்பட்ட குற்றச்சாட்டுக்களை அந்நாடு முற்றாக மறுத்துள்ளது.
In response to Iran's violations, the Air Force destroyed a radar installation near Tehran.
— Prime Minister of Israel (@IsraeliPM) June 24, 2025
Pursuant to the conversation between President Trump and Prime Minister Netanyahu, Israel has refrained from additional attacks.
நான்காம் இணைப்பு
இஸ்ரேல் மீது ஏவுகணைத் தாக்குதல் மேற்கொண்ட குற்றச்சாட்டை ஈரான் மறுத்துள்ளதாக ஈரானின் இராணுவத்தை மேற்கோள் காட்டி அந்நாட்டு ஊடகம் செய்தி வெளியிட்டுள்ளது.
மூன்றாம் இணைப்பு
ஈரானின் போர் நிறுத்த மீறலுக்கு எதிராக, தெஹ்ரானின் மையப்பகுதியில் உள்ள அரசு இலக்குகள் மீது கடுமையான தாக்குதல்கள் மூலம் பதிலளிக்க இஸ்ரேல் பாதுகாப்பு படைக்கு உத்தரவிட்டுள்ளதாக பாதுகாப்பு அமைச்சர் இஸ்ரேல் கட்ஸ் அறிவித்துள்ளார்.
இரண்டாம் இணைப்பு
இஸ்ரேல் போர்நிறுத்தத்திற்கு ஒப்பு கொண்ட பிறகும் ஈரானில் இருந்து ஏவப்பட்ட ஏவுகணைகளை அடையாளம் கண்டுள்ளதாக இஸ்ரேலிய இராணுவம் செய்தி வெளியிட்டுள்ளது.
வான் பாதுகாப்பு அமைப்புகள் "அச்சுறுத்தலைத் தடுக்க செயல்படுகின்றன" என்றும், மக்கள் தங்குமிடங்களுக்குள் சென்று மறு அறிவிப்பு வரும் வரை அங்கேயே இருக்குமாறும் அது கூறுகிறது.
இந்த நிலையில், ஈரான் குறித்த ஏவுகணைத் தாக்குதல் மூலம் போர்நிறுத்தத்தை மீறியுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
🚨 Sirens sounding in northern Israel due to missile fire from Iran 🚨 pic.twitter.com/woGhqD7VCK
— Israel Defense Forces (@IDF) June 24, 2025
முதலாம் இணைப்பு
தெற்கு இஸ்ரேலின் பீர்ஷெபாவில் உள்ள அடுக்குமாடி கட்டிடத்தின் மீது ஈரான் பாலிஸ்டிக் ஏவுகணை தாக்குதல் நடத்தியுள்ளது.
அமெரிக்க (America) ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் (Donald Trump) போர்நிறுத்தத்தை அறிவித்த சிறிது நேரத்திலேயே இந்த தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.
ஈரானின் (Iran) இந்த தாக்குதலில் மூன்று பேர் உயிரிழந்துள்ளதாக இஸ்ரேலிய அவசர சேவை பிரிவு உறுதிப்படுத்தி உள்ளது.
இஸ்ரேல் அவசர சேவை அதிகாரி மேகன் டேவிட் அடோம் தாக்குதல் சம்பவம் தொடர்பில் விபரிக்கையில் "தாக்குதல் நடந்த இடத்திலிருந்து கடும் புகை எழுதுவதாகவும் பல கட்டிடங்கள் சேதமடைந்துள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
