ஈராக்கில் சுட்டு வீழ்த்தப்பட்ட அமெரிக்க விமானம்!
ஈராக் வான்பரப்பு மீது பறக்கும் போது அமெரிக்க விமானம் சுட்டு வீழ்த்தப்பட்டதற்கு ஈராக்கில் உள்ள ஈரான் ஆதரவு பெற்ற போராளிக் குழு ஒன்று பொறுப்பேற்றுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
அந்தக் குழு தனது டெலிகிராம் சனலில் வெளியிடப்பட்ட அறிக்கையில் இந்த தாக்குதலை உறுதிப்படுத்தியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
அத்துடன் தமது நாட்டின் இறையாண்மை மற்றும் வான்வெளியைப் பாதுகாப்பதற்காக KC-135 விமானத்தை சுட்டு வீழ்த்தியதாக குறித்த குழு ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளது.
அமெரிக்க இராணுவம்
இது குறித்து மேலும் தெரியவருகையில், அமெரிக்காவின் KC-135 எரிபொருள் நிரப்பும் (refuelling) இராணுவ விமானம் ஈராக் மீது பறக்கும் போது காணாமல் போனதாகவும் இந்த விபத்து எதிரிகளின் தாக்குதல் காரணமாக ஏற்பட்டதல்ல என்றும் அமெரிக்க இராணுவம் முன்னர் தெரிவித்திருந்தது.
இந்த சம்பவம் இரண்டு விமானங்களை உள்ளடக்கியது என்றும், நட்பு வான்வெளியில் நிகழ்ந்தது என்றும் அமெரிக்க மத்திய கட்டளை பிரிவு ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளது.

அதன்படி, ஒரு விமானம் மேற்கு ஈராக்கில் விபத்துக்குள்ளானது எனவும் இரண்டாவது விமானம் பாதுகாப்பாக தரையிறங்கியது என்றும் விபத்திற்குள்ளான KC-135 எரிபொருள் நிரப்பும் விமானத்தில் எத்தனை விமான சேவை உறுப்பினர்கள் இருந்தனர் என்பது தெளிவாகத் தெரியவில்லை என கூறப்பட்டுள்ளது.
குவைத்தின் வான் பாதுகாப்புப் படைகளின் நட்பு வான்வெளியில் மூன்று F-15 போர் விமானங்கள் சுட்டு வீழ்த்தப்பட்ட பின்னர், ஈரான் போர் தொடங்கியதிலிருந்து இது நான்காவது விமான இழப்பு என்று கூறப்படுகிறது.
1998 இல் 39.6 மில்லியன் டொலர் செலவில் உருவாக்கப்பட்ட KC-135, பொதுவாக நடுவானில் மற்ற விமானங்களுக்கு எரிபொருள் நிரப்பப் பயன்படுத்தப்படுகிறதாக அமெரிக்க விமானப்படை தெரிவிக்கின்றமை குறிப்பிடத்தக்கது.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |