பழிக்குப் பழி தீர்க்கும் ஈரான் - இஸ்ரேல் வைத்தியசாலை மீது வெடித்துச் சிதறிய பாலிஸ்டிக் ஏவுகணை - பகீர் காட்சி
தெற்கு இஸ்ரேலின் உள்ள முக்கிய சொருகா வைத்தியசாலை மீது ஈரான் ஏவுகணைத் தாக்குதல் நடத்தி உள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
ஈரான் (Iran) பாலிஸ்டிக் ஏவுகணைகளை இஸ்ரேல் நோக்கி ஏவியுள்ளதாக இஸ்ரேலிய பாதுகாப்பு படை அறிவித்துள்ளது. இதன் விளைவாக, இஸ்ரேலின் மையப்பகுதியில் சைரன்கள் ஒலித்த வண்ணம் உள்ளதாக உள்ளது.
இந்நிலையிலேயே சொருகா வைத்தியாசலையில் பாலிஸ்டிக் ஏவுகணை வெடித்த பாதிப்புக்கள் மற்றும் மக்கள் பதற்றத்துடன் வெளியேறும் காட்சிககளை இஸ்ரேலிய ஊடகங்கள் வெளியிட்டுள்ளன.
பெரும் சேதம் ஏற்பட்டுள்ளது
இச்சம்பவம் தொடர்பாக வைத்தியசாலை செய்தித் தொடர்பாளர் கூறுகையில், வைத்தியசாலையின் பல்வேறு பகுதிகளில் பெரும் சேதம் ஏற்பட்டுள்ளது. சேதத்தை நாங்கள் தற்போது மதிப்பிடுகிறோம்.
இந்த நேரத்தில் வைத்தியசாலைக்கு வர வேண்டாம் என்று பொதுமக்களை நாங்கள் கேட்டுக்கொள்கிறோம் என தெரிவித்துள்ளார்.
குறித்த வைத்தியசாலையில் காசா போரில் காயமடைந்த இராணுவ வீரர்கள் சிகிச்சை பெற்று வருவதாக சர்வதேச ஊடகம் தெரிவித்துள்ளது.
காசாவில் உள்ள மனிதாபிமான முகாம்கள் மற்றும் வைத்தியசாலைகளின் மீது மிலேச்சத்தனமாக தாக்குதல் நடத்தி வரும் இஸ்ரேல் மீது ஈரானின் இந்த தாக்குதல் பழி தீர்ப்பதாக அமைவதாக சமூகவலைத்தளங்களில் மக்கள் தெரிவித்துள்ளனர்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
