ஈரானிடமிருந்து கிடைத்த மிகப்பெரிய பரிசு...! ட்ரம்பின் அதிரடி அறிவிப்பு
போரை முடிவுக்குக் கொண்டு வருவதற்கான பேச்சுவார்த்தைகளில் ஈரான் காட்டும் தீவிரத்தை வெளிப்படுத்தும் விதமாக ஹார்முஸ் நீரிணை (Strait of Hormuz) வழியாக 10 எண்ணெய் தாங்கிக் கப்பல்கள் கடந்து செல்ல ஈரான் அனுமதித்துள்ளதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.
இந்த வாரத் தொடக்கத்தில் தெஹ்ரானிடமிருந்து கிடைத்ததாகத் தான் குறிப்பிட்ட பரிசு (Gift) என்பது இதுதான் என ட்ரம்ப் தற்போது உறுதிப்படுத்தியுள்ளார்.
ஆரம்பத்தில் எட்டு பெரிய எண்ணெய் கப்பல்களை அனுமதித்த ஈரான், அதனைத் தொடர்ந்து மேலும் இரண்டு கப்பல்களை அனுமதிக்க முன்வந்துள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
இராஜதந்திர நகர்வு
அனுமதிக்கப்பட்ட இந்தத் தாங்கிக் கப்பல்களில் பாகிஸ்தான் கொடி ஏந்திய சில கப்பல்களும் அடங்கும் என அவர் மேலும் சுட்டிக்காட்டியுள்ளார்.
ஈரானின் இந்த இணக்கமான போக்கு சர்வதேசச் சந்தையில் நிலவும் எண்ணெய் விநியோக நெருக்கடியைக் குறைக்க உதவும் எனக் கருதப்படுகிறது.

இந்தநிலையில், சரியான நபர்களுடன் பேச்சுவார்த்தை நடந்து வருவதாகத் தெரிவித்துள்ள ட்ரம்ப், ஈரானின் இந்த விட்டுக்கொடுத்தலை ஒரு சாதகமான தொடக்கமாகக் கருதுகிறார்.
இது மத்திய கிழக்கில் நிலவும் போர்ப் பதற்றத்தைத் தணிப்பதற்கான ஒரு முக்கிய இராஜதந்திர நகர்வாகப் பார்க்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |