ஈரான் - பிரான்ஸ் வெளியுறவு அமைச்சர்கள் அவசர ஆலோசனை!
ஈரானிய வெளியுறவு அமைச்சர் அப்பாஸ் அரக்ச்சி (Abbas Araghchi) மற்றும் பிரான்ஸ் வெளியுறவு அமைச்சர் ஜான்-நோல் பரோ (Jean-Noel Barrot) ஆகியோருக்கு இடையே முக்கிய தொலைபேசி உரையாடல் ஒன்று இடம்பெற்றுள்ளது.
அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் ஈரான் மீது முன்னெடுத்துள்ள போரினால் ஏற்பட்டுள்ள பாதுகாப்பு மற்றும் பொருளாதார விளைவுகள் குறித்து இதன்போது கலந்துரையாடப்பட்டுள்ளது.
ஈரானின் தஸ்னிம் செய்தி நிறுவனம் இது குறித்து அறிக்கையொன்றை வெளியிட்டுள்ளது.
இராஜதந்திரத் தொடர்பு
குறித்த அறிக்கையின்படி ஈரான் மீது திணிக்கப்பட்ட போரையும் பொதுமக்களின் இலக்குகள் மீது நடத்தப்படும் தாக்குதல்களையும் பிரான்ஸ் எதிர்க்கிறது என்ற தனது நாட்டின் உறுதியான நிலைப்பாட்டை ஜான்-நோல் பரோ இதன்போது மீண்டும் வலியுறுத்தியுள்ளார்.
அத்தோடு, பிராந்தியத்தில் போர்ச் சூழல் தொடர்ந்து மோசமடைந்து வருவது குறித்து அவர் தனது ஆழ்ந்த கவலையைத் தெரிவித்துள்ளார்.

இதனுடன் தற்போதைய போரை உடனடியாக முடிவுக்குக் கொண்டு வந்து பிராந்தியத்தில் ஸ்திரத்தன்மை மற்றும் பாதுகாப்பை மீண்டும் நிலைநாட்ட வேண்டுமாயின் அரசியல் மற்றும் இராஜதந்திர நகர்வுகளை (Diplomatic moves) முன்னெப்போதையும் விட வலுப்படுத்த வேண்டியது அவசியம் எனவும் ஜான்-நோல் பரோ சுட்டிக்காட்டியுள்ளார்.
இந்த ஆலோசனையின்போது இரு தலைவர்களும் தூதரக விவகாரங்கள் குறித்து விரிவாகக் கருத்துகளைப் பரிமாறிக்கொண்டதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
மேலும், நிலவும் இக்கட்டான சூழலில் இரு நாடுகளுக்கும் இடையிலான இராஜதந்திரத் தொடர்புகளைத் தொய்வின்றித் தொடர்ந்து முன்னெடுப்பதன் அவசியத்தையும் இரு அமைச்சர்களும் உறுதிப்படுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
மத்திய கிழக்கு போரால் இலங்கையில் பாரிய பொருளாதார சவால்! 10 மணி நேரம் முன்
ஈழப் போராட்டத்துடன் பின்னிப் பிணைந்த போர்க்கால அரங்கு…
3 நாட்கள் முன்