ஹோர்முஸ் நீரிணை முற்றிலும் மூடப்பட்டுள்ளது...! அமெரிக்காவிற்கு ஈரான் பதிலடி
ஹோர்முஸ் நீரிணையில் தடையின்றி இயங்குவதாக அமெரிக்கா கூறிவரும் அறிக்கைகள் எதார்த்த நிலைக்கு மாறானவை என்றும் ஹோர்முஸ் நீரிணை முழுமையாக மூடப்பட்டுள்ளது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஈரானிய இஸ்லாமிய புரட்சிகரக் காவல் படையின் (IRGC) கடற்படைத் தளபதி இதனை தெரிவித்துள்ளார்.
ஐஆர்ஜிசி கடற்படையின் ரியர் அட்மிரல் அலி அஸ்மாய் (Ali Azmaei) இந்தத் தகவலை உறுதிப்படுத்தியுள்ளார்.
இது தொடர்பில் மேலும் தெரிவித்த அவர், “ஹோர்முஸ் ஜலசந்தி முற்றிலும் மூடப்பட்டுள்ளது.
தீர்க்கமான கட்டுப்பாடு
இந்த வழித்தடத்தில் நடைபெறும் அனைத்து நகர்வுகள் மீதும் எங்களுக்கு முழுமையான மற்றும் தீர்க்கமான கட்டுப்பாடு உள்ளது.

எங்கள் ஐஆர்ஜிசி கடற்படை வீரர்களின் கவனத்திற்குத் தப்பி எந்தவொரு நகர்வும் இங்கு நடைபெற முடியாது” என தெரிவித்துள்ளார்.
உண்மை நிலை என்ன என்பதைப் போர்க்களத்தில் (On the ground) தான் பார்க்க வேண்டுமே தவிர, அமெரிக்க அதிகாரிகளின் அறிவிப்புகளிலும் அறிக்கைகளிலும் பார்க்கக் கூடாது” என தெரிவித்துள்ளார்.
ஹோர்முஸ் நீரிணை
ஹோர்முஸ் நீரிணை திறக்கப்பட்டுப் போக்குவரத்து இயல்பாக நடைபெறுவதாக அமெரிக்கா தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது.

ஆனால், ஈரானின் நேரடி அனுமதி இன்றி எந்தவொரு வணிக அல்லது போர்க்கப்பலும் இந்த ஜலசந்தியைக் கடக்க முடியாது என ஈரான் தொடர்ந்து உரிமை கோரி வருகிறது.
உலகின் மிக முக்கியமான கச்சா எண்ணெய் வர்த்தகப் பாதையான ஹோர்முஸ் வழித்தடத்தில் இரு நாடுகளும் மாறி மாறி விடுத்து வரும் இத்தகைய முரண்பாடான கருத்துக்கள், சர்வதேச வர்த்தக உலகிலும் எரிசக்தி சந்தையிலும் நிலவும் பதற்றத்தை மேலும் அதிகரித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |