வளைகுடாவை உலுக்கும் நேரடி மோதல்: கத்தாரின் மீது தொடர் தாக்குதலில் ஈரான்
கத்தாரின் ராஸ் லஃபான் (Ras Laffan) எரிசக்தி தளம் மீது ஈரானிலிருந்து ஏவப்பட்ட ஐந்து ஏவுகணைகளில் ஒன்று தாக்கியதில் பாரிய தீ விபத்து ஏற்பட்டுள்ளது.
அந்நாட்டுப் பாதுகாப்பு அமைச்சகத்தின்படி நான்கு ஏவுகணைகள் வெற்றிகரமாக இடைமறிக்கப்பட்ட போதிலும் ஒரு ஏவுகணை எண்ணெய் சுத்திகரிப்பு ஆலைப் பகுதியில் விழுந்து வெடித்துள்ளது.
இந்தத் தாக்குதலால் அங்கு பரவலான சேதம் ஏற்பட்டுள்ளதாகவும் உடனடியாக விரைந்த மீட்புக் குழுவினர் தீயைக் கட்டுக்குள் கொண்டுவந்துள்ளதாகவும் கத்தார் எனர்ஜி தெரிவித்துள்ளது.
எரிசக்தி நிலையங்கள்
தற்போதைய நிலையில் எவ்வித உயிரிழப்புகளோ அல்லது காயங்களோ ஏற்படவில்லை எனக் கத்தார் உள்துறை அமைச்சகம் உறுதிப்படுத்தியுள்ளது.
المتحدث الرسمي لـ #وزارة_الدفاع: اعتراض وتدمير 4 صواريخ باليستية أُطلقت باتجاه مدينة الرياض، وسقوط أحد أجزاء الصاروخ الباليستي بالقرب من مصفاة جنوب الرياض. pic.twitter.com/Xf0LSGvFGr
— وزارة الدفاع (@modgovksa) March 18, 2026
வளைகுடா பிராந்திய எரிசக்தி நிலையங்கள் மீது ஈரான் தாக்குதல் நடத்தப்போவதாக எச்சரித்திருந்த நிலையிலேயே இந்த ஏவுகணைத் தாக்குதல் முன்னெடுக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |