அமெரிக்காவின் கடற்படை முற்றுகை! பேச்சுவார்த்தையை புறக்கணித்து ஈரானிய தரப்பின் அறிவிப்பு
ஈரானியத் துறைமுகங்கள் மீதான அமெரிக்காவின் கடற்படை முற்றுகை நீக்கப்படாத வரை வொஷிங்டனுடன் பேச்சுவார்த்தைகளைத் தொடர முடியாது என்று ஜெனீவாவிலுள்ள ஐக்கிய நாடுகள் சபைக்கான ஈரானியத் தூதர் அலி பஹ்ரைனி தெரிவித்துள்ளார்.
சர்வதேச ஊடகமொன்றுக்கு வழங்கிய நேர்காணலில், இந்த முற்றுகையானது தற்போதைய போர்நிறுத்த உடன்படிக்கையை பாரிய அளவில் மீறும் செயல் என்று அவர் குற்றஞ்சாட்டியுள்ளார்.
அத்தோடு, பேச்சுவார்த்தை என்பது வெறும் கால அவகாசம் பெறுவதற்காகவோ அல்லது எதிர்த்தரப்பு அடுத்தகட்டத் தாக்குதலுக்குத் தயாராவதற்கோ பயன்படுத்தப்படக் கூடாது என்பதில் ஈரான் உறுதியாக இருப்பதாகவும், நேர்மையான நோக்கத்துடன் மட்டுமே தூதரக ரீதியிலான முன்னெடுப்புகள் அமைய வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.
ஈரானின் கோரிக்கைகள்
மேலும், வொஷிங்டனுடன் எதார்த்தமான அணுகுமுறையைக் கடைப்பிடிக்க வேண்டுமெனவும், ஈரானின் நியாயமான கோரிக்கைகளை அங்கீகரிக்க வேண்டுமெனவும் அவர் கூறியுள்ளார்.

Image Credit: The Korea Times
இந்த நிலையியில், தற்போது போர்நிறுத்தப் பேச்சுவார்த்தைகளுக்கு ஈரான் மீண்டும் திரும்ப வேண்டுமாயின், ஈரானியத் துறைமுகங்கள் மீதான கடற்படை முற்றுகையை அமெரிக்கா உடனடியாக நீக்க வேண்டும் என்பது பிரதான நிபந்தனையாக முன்வைக்கப்பட்டுள்ளது.
இந்த முற்றுகை நீடிக்கப்படுவது போர்நிறுத்த ஒப்பந்தத்தை மீறும் செயலாகும் என்று ஈரானிய அதிகாரிகள் தொடர்ச்சியாக வாதிட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
அன்னை பூபதி! ஈழ நிலத்தின் அன்னையர்களின் குறியீடு
6 நாட்கள் முன்