ட்ரம்ப்பின் மிரட்டலுக்கு பதில் அளித்தது ஈரான்!
ஈரானிய நாகரிகத்தை அழித்துவிடுவேன் என அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் விடுத்த அச்சுறுத்தல், சாத்தியமான பேச்சுவார்த்தைக்கு உதவாத ஒரு அறியாமையின் அடையாளம் என்று ஈரான் தெரிவித்துள்ளது.
ஈரான் அரசாங்க செய்தித் தொடர்பாளர் ஃபாத்திமா மொஹஜெரானி இந்த அறிவிப்பை விடுத்துள்ளார்.
"மக்களின் அமைதியையும் பாதுகாப்பையும் பேணுவதே அரசாங்கத்தின் முதன்மையான முன்னுரிமையாகும், மேலும் அச்சுறுத்தல்கள் பொது அமைதியைக் குலைக்காது," என்று மொஹஜெரானி அரச ஊடகமொன்றுக்கு அளித்த பேட்டியில் கூறியுள்ளார்.
அறியாமையின் அடையாளம்
அதன்போது, மேலும் கருத்து வெளியிட்ட அவர், "மரியாதையுடன் பேச்சுவார்த்தைக்கான கதவு திறக்கும் என்றும் அச்சுறுத்தல்கள், அற்பத்தனம் மற்றும் அவமானப்படுத்துதல் ஆகிய குறுகிய பாதைகள் உள்ளே செல்வதற்கான வழி அல்ல என்றும் எச்சரித்துள்ளார்.

Image Credit: Center for American Progress
ஒரு நாகரிகத்தை அச்சுறுத்துவது, எல்லாவற்றிற்கும் மேலாக, பலமுறை நெருக்கடிகளைக் கடந்து தொடர்ந்து நிலைத்து நிற்கும் ஒரு தேசத்தின் வரலாற்றைப் பற்றிய அறியாமையின் அடையாளம் என்று அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
அமெரிக்கா சிவப்பு கோடுகளை தாண்டினால் ஏற்படப்போகும் பேரழிவு : ஈரான் புரட்சிகர படை விடுத்துள்ள கடும் எச்சரிக்கை
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |