ஹோர்முஸ் நீரிணையின் பாதுகாப்பு குறித்து முக்கிய தரப்புக்களுடன் ஈரான் கலந்துரையாடல்!
ஹோர்முஸ் ஜலசந்தியின் பாதுகாப்பு நிலைமை தொடர்பாக, ஈரான் வெளியுறவு அமைச்சர் அப்பாஸ் அராக்சி, சவூதி அரேபியா மற்றும் ஓமான் வெளியுறவு அமைச்சர்களுடன் தனித்தனியாக தொலைபேசியில் பேசியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த பேச்சுவார்தையில் ஹோர்முஸ் ஜலசந்தியின் பாதுகாப்பு தொடர்பான பிரச்சினைகள் குறித்து அவர் விவரித்தார் என கூறப்பட்டுள்ளது.
மேற்குறிப்பிட்ட விடயம் இன்று (28.07.2026) அவரது டெலிகிராம் பக்கத்தில் வெளியிடப்பட்ட ஒரு அறிக்கையில் விளக்கமாக கூறப்பட்டுள்ளது.
ஈரானின் வெளியுறவு அமைச்சர்
மேலும் அந்த அறிக்கையில் சமீபத்திய இருதரப்பு மற்றும் பிராந்திய முன்னேற்றங்கள் குறித்து கலந்துரையாடிய அவர், பிராந்தியத்தில் ஸ்திரத்தன்மையை நிலைநிறுத்த ஒத்துழைப்பை வலுப்படுத்தி, கூட்டு இராஜதந்திர முயற்சிகளை முன்னெடுக்க வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்தியதாக கூறப்பட்டுள்ளது.

இதற்கிடையில், ஈராக்கில் உள்ள ஈரான் ஆதரவு ஆயுதக் குழுக்களால் சவூதி அரேபியாவை நோக்கி ஏவப்பட்ட ஆளில்லா விமானங்களை சவூதி பாதுகாப்புப் படைகள் சுட்டு வீழ்த்தியதாக அறிவிக்கப்பட்டதைத் தொடர்ந்து, அப்பாஸ் அராக்சியும் சவூதி வெளியுறவு அமைச்சர் பைசல் பின் ஃபர்ஹானும் இந்த தொலைபேசி உரையாடலை மேற்கொண்டதாக அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |