அமெரிக்க போர்க்கப்பல்கள் மீது ஈரான் பதிலடி தாக்குதல்
அமெரிக்கக் போர்கப்பல்கள் மீது ஈரானியப் படைகள் ஞாயிற்றுக்கிழமை ஆளில்லா விமானத் தாக்குதல்களை நடத்தியதாக ஈரானிய ஊடகங்களை மேற்கோள் காட்டி செய்திகள் வெளியாகியுள்ளன.
அமெரிக்கப் படைகள் ஈரானியக் கப்பல் மீது துப்பாக்கிச் சூடு நடத்தி, அதனை வழிமறித்ததற்குப் பதிலடியாக இந்த தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
ஓமான் வளைகுடாவில் அமெரிக்கப் படைகள் 'டூஸ்கா' என்ற கொள்கலன் கப்பலில் ஏறிய பிறகு, ஈரானிய ஆளில்லா விமானங்கள் அமெரிக்கக் கப்பல்கள் மீது ஏவப்பட்டதாக அரை - அரசு செய்தி நிறுவனமான தஸ்னிம் செய்தி வெளியிட்டது. ஆனால் இலக்குகள் இராணுவக் கப்பல்களா அல்லது வர்த்தகக் கப்பல்களா என்பதை அது குறிப்பிடவில்லை.
மலேசியாவின் கிளாங் துறைமுகம்
ஏப்ரல் 7 அன்று அறிவிக்கப்பட்டு கடைப்பிடிக்கப்பட்டு வரும் பாகிஸ்தானின் மத்தியஸ்தத்தில் ஏற்பட்ட இரண்டு வார கால போர் நிறுத்தத்தை மீறிய செயல் இது என்று கூறிய ஈரான் அமெரிக்கப் படைகள் ஈரானியக் கப்பலைக் கைப்பற்றியதை உறுதிசெய்ததுடன், "விரைவில்" பதிலடி கொடுக்கப்படும் என எச்சரித்திருந்தது.

போர் நிறுத்த மீறல் என்று விவரித்த ஒரு செயலுக்குப் பிறகு அமெரிக்கப் படைகள் கப்பலைக் குறிவைத்து, அதன் வழிசெலுத்தல் அமைப்பைச் செயலிழக்கச் செய்து, அதில் ஏறியதாக கதம் அல்-அன்பியா மத்திய தலைமையகம் கூறியதாக அரை - அரசு நிறுவனமான ஃபார்ஸ் செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.
கப்பல் கண்காணிப்புத் தரவுகளின்படி, 'டூஸ்கா' கப்பல் ஏப்ரல் 12 அன்று மலேசியாவின் கிளாங் துறைமுகத்திலிருந்து புறப்பட்டது. அமெரிக்கப் படைகள் கப்பலில் ஏறுவதற்கு முன்பு அதன் மீது துப்பாக்கிச் சூடு நடத்தியதாக ஈரானிய இராணுவ செய்தித் தொடர்பாளர் இப்ராஹிம் ஸோல்ஃபகாரி கூறினார்.
இந்தச் சம்பவம் ஞாயிற்றுக்கிழமை அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப்பால் முதலில் அறிவிக்கப்பட்டது. பின்னர், ஓமான் வளைகுடாவில் அமெரிக்கக் கடற்படைத் தடையை மீற முயன்ற ஈரானியக் கொடி ஏற்றப்பட்ட சரக்குக் கப்பலை USS ஸ்ப்ரூயன்ஸ் இடைமறித்ததாகக் கூறிய அமெரிக்க மத்திய கட்டளைப் பிரிவு (CENTCOM) இதை உறுதிப்படுத்தியது.
போர் நிறுத்தத்தை மீறிய அமெரிக்கா
இதன்படி, கடற்படையினர் தொடர்ந்து அந்தக் கப்பலை அமெரிக்காவின் காவலில் வைத்துள்ளதாகவும் அது ஈரானின் பந்தர் அப்பாஸ் துறைமுகத்திற்குச் சென்று கொண்டிருந்ததாகவும் ஓர் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
மேலும், துப்பாக்கிச் சூடு நடத்துவதற்கு முன்பு ஒரு அமெரிக்கப் போர்க்கப்பல் அந்தக் கப்பலை எச்சரிக்கும் காணொளிக் காட்சிகளை, X தளத்தில் CENTCOM வெளியிட்டது.

ஆக்கிரமிப்பு மனப்பான்மை கொண்ட அமெரிக்கா, போர் நிறுத்தத்தை மீறி, கடல் கொள்ளையில் ஈடுபட்டு, ஈரானின் கப்பல்களில் ஒன்றின் வழிசெலுத்தல் அமைப்பைச் செயலிழக்கச் செய்த பிறகு அதன் மீது தாக்குதல் நடத்தியுள்ளதாகவும் பல பயங்கரவாத கடற்படை வீரர்களை கப்பலில் இறக்கிய பின்னர் அமெரிக்கப் படைகள் அதில் ஏறியதாகவும் ஸோல்ஃபகாரி கூறினார்.
அமெரிக்க இராணுவத்தின் இந்த ஆயுதமேந்திய கடற்கொள்ளை செயலுக்கு ஈரானின் இராணுவப் படைகள் விரைவில் பதிலடி கொடுக்கும் என்று நாங்கள் எச்சரிக்கிறோம் என்று மேலும் தெரிவித்தமை குறிப்பிடத்தக்கது.
you may like this
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |