ஹோர்முஸ் நீரிணையில் பதற்றம் - பிரான்ஸ் கப்பல் மீது துப்பாக்கிச் சூடு
ஹோர்முஸ் நீரிணையில் பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்த ஒரு கப்பலுக்கு ஈரான் துப்பாக்கிச்சூடு நடத்தியுள்ளதாக பிரான்ஸ் கப்பல் போக்குவரத்து நிறுவனம் CMA CGM தெரிவித்துள்ளது.
நிறுவனத்தின் அறிக்கையின்படி, கப்பல் தொடர்ந்து இயங்கி வருகிறது, சில கொள்கலன்களுக்கு மட்டுமே சேதம் ஏற்பட்டுள்ளது.
அமெரிக்கா தனது துறைமுகங்களைத் தொடர்ந்து முற்றுகையிட்டிருப்பதைக் காரணம் காட்டி, ஹோர்முஸ் நீரிணையை மீண்டும் திறப்பது குறித்த தனது முந்தைய முடிவை ஈரான் மாற்றியமைத்ததைத் தொடர்ந்து இந்தச் சம்பவம் நிகழ்ந்துள்ளது.
ஈரான் துப்பாக்கிச் சூடு
நீரிணைப் பகுதியில் பிரான்ஸ் மற்றும் பிரித்தானிய கப்பல்கள் மீது ஈரான் துப்பாக்கிச் சூடு நடத்தியதாகவும் முக்கிய நீர்வழிப்பாதையில் பதற்றம் அதிகமாக உள்ளதாகவும் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.

அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப் இன்று தனது 'ட்ரூத் சோஷியல்' சமூக ஊடகத் தள பதிவில் குறிப்பிட்டுள்ளார்.
ஹோர்முஸ் ஜலசந்தியை மீண்டும் திறப்பது குறித்த தெஹ்ரானின் நிலைப்பாட்டில் இருந்து பின்வாங்கியதைத் தொடர்ந்து, எவர்கிளேட் உட்பட பல கப்பல்கள் மீது ஈரானியப் படைகள் துப்பாக்கிச் சூடு நடத்தியதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |