ஈரானியக் கப்பல் அமெரிக்க வசம் இருப்பது உறுதி: CENTCOM அதிரடி அறிவிப்பு
அரேபியக் கடலில் ஈரானிய சரக்குக் கப்பலான டூஸ்கா (Touska) கைப்பற்றப்பட்டதை அமெரிக்க மத்திய கட்டளைத் தலைமையகம் (CENTCOM) தற்போது அதிகாரப்பூர்வமாக உறுதிப்படுத்தியுள்ளது.
ஈரானியப் படைகள் அமெரிக்காவை விரட்டியடித்ததாக ஈரானிய ஊடகங்கள் கூறி வந்த நிலையில் இந்தக் கப்பல் தற்போது தங்கள் வசமே உள்ளதாக அமெரிக்க இராணுவம் திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளது.
ஈரானியத் துறைமுகம் நோக்கிச் சென்ற அந்தக் கப்பலுக்குச் சுமார் ஆறு மணிநேரம் தொடர்ச்சியான எச்சரிக்கைகள் வழங்கப்பட்டும் அவை மதிக்கப்படாததால் இந்த அதிரடி நடவடிக்கை எடுக்கப்பட்டதாக CENTCOM விளக்கியுள்ளது.
ஈரானிய மாலுமிகள்
அமெரிக்காவின் உத்தரவுகளுக்கு ஈரானிய மாலுமிகள் கீழ்ப்படிய மறுத்ததைத் தொடர்ந்து யுஎஸ்எஸ் ஸ்ப்ரூயன்ஸ் (USS Spruance) போர்க்கப்பலில் இருந்த ஐந்து இன்ச் துப்பாக்கிகளால் டூஸ்கா கப்பலின் எஞ்சின் அறையைக் குறிவைத்துத் தாக்குதல் நடத்தியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இத்தாக்குதலால் கப்பலின் இயக்கம் முழுமையாக முடங்கியுள்ளது.

இதையடுத்து, அமெரிக்காவின் 31 ஆவது மெரின் (Marine) படைப் பிரிவினர் கப்பலுக்குள் புகுந்து கப்பலைக் கைப்பற்றியுள்ளனர்.
தற்போது அந்தக் கப்பல் மற்றும் அதில் உள்ள பணியாளர்கள் அனைவரும் அமெரிக்கக் கடற்படையின் நேரடிக் கட்டுப்பாட்டில் உள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |