ஈரானின் அணுமையம் மீது மிக விரைவில் தாக்குதல்...! ட்ரம்ப் வெளியிட்ட அதிரடி அறிவிப்பு
ஈரானின் அணுஆயுதச் செறிவூட்டல் இயந்திரங்கள் (Nuclear centrifuges) அமைந்திருப்பதாகக் கருதப்படும் பகுதியின் மீது அமெரிக்கா மிக விரைவில் கடுமையான தாக்குதலை நடத்தும் என ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் எச்சரித்துள்ளார்.
அமெரிக்காவிற்கும் ஈரானுக்கும் இடையே மோதல்கள் தீவிரமடைந்து வரும் சூழ்நிலையில் அவர் இந்த கருத்தை வெளியிட்டுள்ளார்.
ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனை தெரிவித்துள்ளார்.
அணுஉலைச் செறிவூட்டல்
இதன்போது நடான்ஸ் (Natanz) பிராந்தியத்தில் உள்ள பிக்ஏக்ஸ் மலை (Pickaxe Mountain) பகுதிக்கு ஈரான் தனது அணுஉலைச் செறிவூட்டல் இயந்திரங்களை மாற்றியுள்ளதா எனக் கேள்வி எழுப்பப்பட்டுள்ளது.
இதற்கு பதிலளித்த ட்ரம்ப், “மிக விரைவில் அப்பகுதியில் தாக்குதல் நடத்தப்படும்.

அதிலிருந்து தப்பிப்பதற்கு ஈரானால் எதுவுமே செய்ய முடியாது.
வழக்கமாக இதுபோன்ற இராணுவத் திட்டங்களை நான் வெளிப்படையாகச் சொல்ல மாட்டேன்.
கடுமையாகத் தாக்குதல்
ஈரானால் ஏதேனும் செய்ய முடியும் என்று நான் நினைத்திருந்தால் இதை ஒருபோதும் கூறியிருக்க மாட்டேன் ஆனால் நாங்கள் விரைவில் அப்பகுதியைக் இலக்கு வைத்து மிகவும் கடுமையாகத் தாக்குவோம்” என அவர் தெரிவித்துள்ளார்.

அமெரிக்க மற்றும் இஸ்ரேலிய படைகள் ஈரானின் அணு மற்றும் இராணுவ இலக்குகளை இலக்கு வைத்து தொடர் வான்வழித் தாக்குதல்களை நடத்தி வருகின்றன.
இந்த நிலையில், நிலத்தடி மற்றும் மலைப் பகுதிகளில் ஈரான் மறைத்து வைத்துள்ளதாகக் கருதப்படும் முக்கிய அணுசெறிவூட்டல் மையங்களை அழிப்பதே அமெரிக்காவின் அடுத்தகட்ட நடவடிக்கை என்பதை ட்ரம்பின் இந்த அறிவிப்பு உறுதிப்படுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
கொடிய சட்டமான PTA கொண்டுவரப்பட்டு இன்றுடன் 47 ஆண்டுகள்…
3 நாட்கள் முன்