ஈரானில் கல்வி நிறுவனங்கள் மீது தாக்குதல் ! நூற்றுக்கணக்கானோர் பலி
ஈரான் மீதான அமெரிக்க - இஸ்ரேல் போர் தொடங்கியதிலிருந்து 600 கல்வி நிறுவனங்கள் இலக்கு வைக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கல்வி அமைச்சின் தகவல் மற்றும் மக்கள் தொடர்பு மையத்தின் தலைவர் ஹொசைன் சாதகி இதனைத் தெரிவித்துள்ளார்.
அத்தோடு, போர் தொடங்கியதிலிருந்து சுமார் 250 மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் கொல்லப்பட்டுள்ளனர் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
மறு அறிவிப்பு
இந்தத் தாக்குதல்களில் 184 மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் காயமடைந்துள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.
தெஹ்ரானில் மட்டும் 16 மாணவர்கள் மற்றும் ஐந்து ஆசிரியர்கள் கொல்லப்பட்டுள்ளதாக ஹொசைன் சாதகி தெரிவித்துள்ளார்.

எட்டு மாணவர்கள் மற்றும் ஐந்து கல்வியாளர்கள் காயமடைந்துள்ளனர் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இந்தநிலையில், பெப்ரவரி 28 முதல் சுமார் 200 நிர்வாக, கலாச்சார மற்றும் கல்வி வசதிகள் சேதமடைந்துள்ளதாக ஹொசைன் சாதகி தெரிவித்துள்ளார்.
ஈரானின் தொடர்ச்சியான தாக்குதல்களுக்கு மத்தியில் வளைகுடா நாட்டின் கடற்கரைகளைப் பாதுகாக்கும் பொருட்டு மறு அறிவிப்பு வரும் வரை கடல்வழித் தடை விதிக்கப்பட்டுள்ளதாகப் பஹ்ரைன் அறிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |