ஜோர்தானை தாக்கிய ஈரானிய ஏவுகணைகள்! பலியாகிய அமெரிக்க வீரர்கள்
ஜோர்தானில் ஈரான் மேற்கொண்ட பாலிஸ்டிக் ஏவுகணை மற்றும் ஆளில்லா விமான (ட்ரோன்) தாக்குதல்களை தடுத்து நிறுத்தும் நடவடிக்கையின்போது, இரண்டு அமெரிக்க இராணுவ வீரர்கள் உயிரிழந்ததாக அமெரிக்க மத்திய கட்டளை (CENTCOM) உறுதிப்படுத்தியுள்ளது.
மேலும், ஒரு வீரர் காணாமல் போயுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. பென்டகன் வெளியிட்ட தகவலின்படி, ஜூலை 17-ஆம் திகதி நடைபெற்ற இந்த தாக்குதலின்போது, அமெரிக்கா மற்றும் அதன் கூட்டணி படைகள் தற்காப்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டிருந்தன.
இதில் நான்கு அமெரிக்க வீரர்கள் காயமடைந்து ஜோர்தானில் உள்ள மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்றனர்.
CENTCOM Statement on Recently Fallen, Missing U.S. Service Members
— U.S. Central Command (@CENTCOM) July 18, 2026
TAMPA, Fla. — On July 17, two U.S. service members in Jordan were killed in action as U.S. Central Command (CENTCOM) and partner forces defended against Iranian ballistic missile and drone attacks. Additionally,…
உயிரிழந்த அமெரிக்க இராணுவ வீரர்களின்
பின்னர் அவர்கள் அனைவரும் மருத்துவமனையிலிருந்து வீடு திரும்பியதாகவும், லேசான காயமடைந்த மற்ற வீரர்கள் மீண்டும் பணியில் சேர்ந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த சம்பவத்துடன், தற்போதைய மோதல் தொடங்கியதிலிருந்து உயிரிழந்த அமெரிக்க ராணுவ வீரர்களின் எண்ணிக்கை 16 ஆக உயர்ந்துள்ளது. மேலும், 430-க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர்.
உயிரிழந்த வீரர்களின் பெயர்கள் மற்றும் பிற விவரங்கள், அவர்களது குடும்பத்தினருக்கு அதிகாரப்பூர்வமாக தகவல் தெரிவிக்கப்பட்ட பிறகே வெளியிடப்படும் என்று சென்ட்காம் தெரிவித்துள்ளது.
இதற்கிடையில், அமெரிக்கா ஈரான் மீது தாக்குதல்களைத் தொடர்ந்தால் மறக்க முடியாத பாடங்களை எதிர்கொள்ள நேரிடும் என்று ஈரானின் உயர்மட்ட தலைமையிலிருந்து எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
மறுபுறம், ஈரானின் இராணுவ மற்றும் ஆயுதக் கட்டமைப்புகள் மீது தொடர்ந்து ஏழாவது நாளாக தாக்குதல்கள் நடத்தப்பட்டதாக அமெரிக்க இராணுவம் தெரிவித்துள்ளது.
இதற்கு பதிலடியாக, குவைத், ஈராக், பஹ்ரைன், ஜோர்டான் மற்றும் சவூதி அரேபியாவில் உள்ள அமெரிக்க இராணுவத் தளங்களை ஈரான் குறிவைத்து தாக்கியதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இதில் குவைத்தில் உள்ள கடல்நீர் சுத்திகரிப்பு நிலையம் மற்றும் எண்ணெய் நிலையம் சேதமடைந்ததாகவும் கூறப்படுகிறது.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
கொடிய சட்டமான PTA கொண்டுவரப்பட்டு இன்றுடன் 47 ஆண்டுகள்… 16 மணி நேரம் முன்