கட்டார் - துபாய் - அபுதாபி மீது ஈரான் தாக்குதல்
புதிய இணைப்பு
துபாய் மற்றும் அபுதாபியில் வெடிப்புகள் நடப்பதாக பல தகவல்கள் வெளியாகியுள்ளன.
இதன்படி பின்வரும் நாடுகளின் விமான தளங்களை இலக்கு வைத்து ஈரான் தனது தாக்குதவை ஆரம்பித்துள்ளது.
- கத்தாரில் உள்ள அல்-உதெய்த் விமானத் தளம்
- குவைத்தில் உள்ள அல்-சேலம் விமானத் தளம்
- ஐக்கிய அரபு எமிரேட்ஸில் உள்ள அல்-தஃப்ரா விமானத் தளம்
- பஹ்ரைனில் ஐந்தாவது அமெரிக்கத் தளம்
மேலும், சவுதி அரேபியாவின் ரியாத்திலும் குண்டுவெடிப்புகள் நடந்ததாக AFP செய்தி நிறுவனம் சுட்டிக்காட்டியுள்ளது.

ஐக்கிய அரபு எமிரேட்ஸின் அபுதாபியில், ஈரானில் இருந்து ஏவப்பட்ட பல ஏவுகணைகள் இடைமறிக்கப்பட்டதில், குறைந்தது ஒருவர் கொல்லப்பட்டதாக அந்நாட்டின் அரசு செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.
"இந்த தாக்குதல் தேசிய இறையாண்மை மற்றும் சர்வதேச சட்டத்தின் அப்பட்டமான மீறல்" என்று ஐக்கிய அரபு எமிரேட்ஸ் கூறுகிறது. "இந்த அதிகரிப்பிற்கு பதிலளிக்கும் முழு உரிமையும் அதற்கு உள்ளது" என்று கூறுகிறது.
முதலாம் இணைப்பு
ஈரானிய ஏவுகணை ஒன்று கட்டாரின் வான்பரப்புக்குள் பாய்ந்த நிலையில் அதை தடுத்து வீழ்த்தியதாக அந்நாட்டு பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது.
இதன்படி , குறித்த ஈரானிய ஏவுகணை Patriot வான் பாதுகாப்பு அமைப்பின் மூலம் தடுக்கப்பட்டது என சர்வதேச ஊடகங்கள் சுட்டிக்காட்டியுள்ளன.
மேலும், ஐக்கிய அரபு எமிரேட்ஸ் தலைநகர் அபுதாபியில் இருந்து ஒரு பெரிய வெடிப்புச் சத்தம் கேட்டதாக ரொய்ட்டர்ஸ் செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.
பஹ்ரைனில் வெடிப்புகள்
அத்தோடு குவைத்தில் வெடிச்சத்தங்கள் கேட்டதாகவும், பஹ்ரைனில் உள்ள அமெரிக்க தளம் உள்ளிட்ட பகுதிகளில் தாக்குதல் நடந்ததாக தற்போது சர்வதேச ஊடகங்கள் விளக்கியுள்ளன.
அமெரிக்க கடற்படையின் 5வது கடற்படையின் சேவை மையம் "ஏவுகணை தாக்குதலுக்கு உள்ளாகியுள்ளது" என்று பஹ்ரைனின் தேசிய தொடர்பு மையம் தெரிவித்துள்ளது.
இது அரசு நடத்தும் பஹ்ரைன் செய்தி நிறுவனம் (BNA) மேற்கோள் காட்டிய அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
வளைகுடா, செங்கடல், அரேபிய கடல் மற்றும் இந்தியப் பெருங்கடலின் சில பகுதிகளை உள்ளடக்கிய 5வது கடற்படையின் தலைமையகம் பஹ்ரைனில் உள்ளது.
பஹ்ரைன் மீது ஏவுகணைகள் மற்றும் ட்ரோன்கள் வீசப்படும் என்ற அச்சுறுத்தல்களுக்கு மத்தியில், அமெரிக்க தூதரகம் குடிமக்கள் தஞ்சம் அடையுமாறு எச்சரித்திருந்தாலும், அமெரிக்க இராணுவத்திடமிருந்து உடனடி கருத்து எதுவும் இல்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தலையில் வளைகுடா நாடுகள் தங்களது வான்வெளியை மூடுவதாக அறிவித்துள்ளன.
இதன்படி கட்டார், குவைத் மற்றும் ஐக்கிய அரபு எமிரேட்ஸ் ஆகியவை தங்கள் வான்வெளியை மூடியுள்ளன.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்... |