ஈராக்கில் உள்ள அமெரிக்க குடிமக்களுக்கு வெளியேற்ற எச்சரிக்கை
ஈராக்கில் உள்ள அமெரிக்க தூதரகம் அமெரிக்க குடிமக்களுக்கு வெளியேற்ற எச்சரிக்கையை விடுத்துள்ளது.
பாக்தாத்தில் உள்ள அமெரிக்க தூதரக கட்டிடத்தின் மீது இரவு முழுவதும் நடத்தப்பட்ட ஏவுகணைத் தாக்குதலைத் தொடர்ந்து , அமெரிக்க குடிமக்கள் உடனடியாக ஈராக்கை விட்டு வெளியேற வேண்டும் என்று புதுப்பிக்கப்பட்ட பாதுகாப்பு எச்சரிக்கையில் குறித்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
"அமெரிக்கர்கள் கடத்தப்படும் அபாயத்தை எதிர்கொள்கின்றனர், மேலும் அமெரிக்க தனிநபர்கள் நேரடியாக குறிவைக்கப்படுகிறார்கள்.
பயங்கரவாத போராளிகள்
ஈரானுடன் இணைந்த பயங்கரவாத போராளிகள், அவசரநிலைகளில் திறம்பட பதிலளிக்கும் ஈராக்கிய அதிகாரிகளின் திறனைத் தடுக்கக்கூடும்.

அமெரிக்க குடிமக்கள் உடனடியாக ஈராக்கை விட்டு வெளியேற வேண்டும்.
ஈரானுடன் இணைந்த பயங்கரவாத போராளிகளால் ஏற்படும் குறிப்பிடத்தக்க அச்சுறுத்தலைக் கருத்தில் கொண்டு, ஈராக்கில் தங்க விரும்பும் அமெரிக்க குடிமக்கள் தங்கள் முடிவை மறுபரிசீலனை செய்ய ஊக்குவிக்கப்படுகிறார்கள்." என அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |