தனிமைப்படுத்தல் ஊரங்குசட்டத்தை மீறிய பிள்ளையான்?
pillaiyan
batticaloa
isolation curfew
By Sumithiran
மட்டக்களப்பில் சதொச விற்பனைநிலைய கிளை திறப்பு விழா தற்போதைய மட்டக்களப்பு மாவட்ட பொதுஜன பெரமுனவின் நாடாளுமன்ற உறுப்பினர் பிள்ளையான் (சிவநேசதுரை சந்திரகாந்தன்) தலைமையில் அண்மையில் நடைபெற்றது.
எனினும் தனிமைப்படுத்தல் ஊரடங்கு உத்தரவை மீறி, அரசு அதிகாரிகளின் அறிவுறுத்தல்களை பொருட்படுத்தாமல் அவர் இந்த நிகழ்ச்சியை நடத்தியதாக கூறப்படுகிறது.
இந்த புதிய சதொச விற்பனை நிலையம் மற்றும் மொத்த பரிமாற்ற மையம் திறக்கப்பட்டதால், அப்பகுதி மக்கள் அதிக அளவில் பொருட்களை வாங்குவதற்காக திரண்டனர்.
அரசாங்க தகவல் திணைக்களத்தின்படி, பாதுகாப்புப் படையினரின் தலையீடு காரணமாக, பொதுமக்கள் சுகாதார நடைமுறைகளின்படி கடைக்கு அனுப்பப்பட்டனர்.
