கமேனியின் அலுவலகத்தை தகர்த்தது இஸ்ரேல்! ஈரான் ஜனாதிபதியின் நிலைமை கேள்விக்குறி
இஸ்ரேலின் தாக்குதல்கள், ஈரானின் உச்ச தலைவர் அலி கமேனி மற்றும் ஜனாதிபதி மசூத் பெஷேஷ்கியன் ஆகியோரை குறிவைத்ததாக இஸ்ரேல் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.
அத்துடன், அந்நாட்டின் மற்ற உயர்மட்ட அதிகாரிகளும் இராணுவத் தளபதிகளும் தாக்குதல்களின் இலக்காக இருந்ததாகவும் அவர் கூறியுள்ளார்.
உயர்ந்த வெற்றி
இந்நிலையில், ஈரானின் உச்ச தலைவரின் அலுவலகம் மற்றும் தெஹ்ரானில் உள்ள ஜனாதிபதி அலுவலகமும் குறிவைக்கப்பட்டு தாக்கப்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

எனினும், இந்த தாக்குதல்களின் விளைவுகள் குறித்து இதுவரை தெளிவான தகவல் வெளியாகவில்லை.
இதுவரை மேற்கொள்ளப்பட்ட தாக்குதல்கள் ஈரான் தலைமைத்துவத்தை நீக்கும் இலக்கில் மிகவும் உயர்ந்த வெற்றியை பெற்றுள்ளதாக இஸ்ரேல் மதிப்பிட்டுள்ளதாக செய்திகள் கூறுகின்றன.
இந்த மதிப்பீடு, குறிப்பாக உயர்மட்ட இராணுவத் தளபதிகள் மற்றும் ஈரான் ஜனாதிபதி மசூத் பெஸெஷ்கியான் தொடர்பானதாக இருக்கலாம் என கூறப்படுகிறது.
இலக்கு வைக்கப்பட்ட முன்னாள் ஜனாதிபதி
எனினும், ஈரானின் முக்கிய ஊடகமொன்று, ஜனாதிபதி பெஸெஷ்கியான் முழுமையாக நலமாக உள்ளார் என்று செய்தி வெளியிட்டுள்ளது.

மேலும், அந்நாட்டின் முன்னாள் ஜனாதிபதி மஹ்மூத் அஹ்மதிநெஜாத் வசிக்கும் தெஹ்ரானின் நர்மக் பகுதியில் உள்ள ஒரு வீடு தாக்கப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்நிலையில், முன்னாள் ஜனாதிபதி காயமடைந்தாரா என்பது தெளிவாகத் தெரியவில்லை என்று சர்வதேச வட்டாரங்கள் கூறுகின்றன.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |