இஸ்ரேல் – காசாவுக்கு இடையிலான போர் பதற்றம்: ஐரோப்பிய நாடுகளில் வலுக்கும் போராட்டம்
இஸ்ரேல்(israel) – காசாவுக்கு இடையிலான போரை முடிவுக்குக் கொண்டுவர வலியுறுத்தி ஐரோப்பிய நாடுகளில் போராட்டம் வலுத்து வருவதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
லண்டன், ஸ்பெயின்ஸ், பிரான்ஸ், சுவீடன் உள்ளிட்ட நாடுகளில் ஏராளமான மக்கள் அந்நாட்டுக் கொடிகளை ஏந்தி தூதரகங்களை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
அந்த வகையில், ஸ்பெயின் நாட்டின் சான் செபாஸ்டியன் நகரில் ,பலஸ்தீன மக்கள் மீது நடத்தப்படும் படுகொலைக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் என்ற கோரிக்கையை எழுப்பி பேரணியில் மக்கள் ஈடுபட்டுள்ளனர்.
வலுக்கும் எதிர்ப்பு
அதேநேரம், பலஸ்தீன கொடிகளை ஏந்தியவாறு பிரான்ஸில் இசை வாத்தியங்கள் முழங்க மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
அத்துடன், லண்டனிலும் ஏராளமான மக்கள் கூடி முழக்கங்களை எழுப்பிப் போராடுவதுடன் இஸ்ரேலுக்கு ஆயுத விநியோகத்தை நிறுத்த வேண்டும் என்று தூதரகத்தை அவர்கள் முற்றுகையிட்டுள்ளனர்.
மேலும், சுவீடனில் வீதிகளில் குவிந்த மக்கள் காசா மக்களுக்கு ஆதரவாக பதாகைகளை ஏந்தியவாறு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |


உலகில் பெண் விடுதலையை சாத்தியப்படுத்திய தலைவர் பிரபாகரன்…
2 வாரங்கள் முன்