வலுக்கும் இஸ்ரேல் ஹமாஸ் போர்: இதுவரை கொல்லப்பட்ட ஊடகவியலாளர்கள்
இஸ்ரேல் ஹமாஸ் போர் வலுவடைந்து வருகின்ற மத்தியில் இதுவரை 31 ஊடகவியலாளர்கள் கொல்லப்பட்டதாக இஸ்ரேல் ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது.
இஸ்ரேல் நாட்டின் மீது ஹமாஸ் பயங்கரவாத அமைப்பு கடந்த 7ஆம் திகதி, ஆயிரத்திற்கும் மேற்பட்ட ராக்கெட் குண்டுகளை வீசி தாக்குதல் நடத்தியது.
பின்னர் அந்நாட்டு எல்லைக்குள் அதிரடியாக புகுந்து, அந்த பகுதியில் தங்கியிருந்தவர்களை கடுமையாக தாக்கி வன்முறையில் ஈடுபட்டது.
இந்த சம்பவத்தில், 260 பேர் கொல்லப்பட்டனர். பலர் காயமடைந்தனர். அந்த அமைப்பு 210 பேரை பணய கைதிகளாக சிறை பிடித்து சென்றது.
26 பேர் பலஸ்தீனர்கள்
இதனை தொடர்ந்து, இஸ்ரேல் அரசும் இதற்கு பதிலடி கொடுத்து வருகிறது. அவர்களை மீட்கும் பணியும் நடந்து வருகிறது.
25-வது நாளாக இஸ்ரேல் மற்றும் ஹமாஸ் பயங்கரவாதிகள் இடையேயான மோதல் இன்றும் தொடர்ந்து வருகிறது.
இந்த நிலையில், போர் பற்றிய விவரங்களை கொண்டு வருவதற்காக அமெரிக்கா, இங்கிலாந்து, பிரான்ஸ் மற்றும் ஜெர்மனி உள்ளிட்ட நாடுகள் பத்திரிகையாளர்களை அனுப்பி வைத்துள்ளன.

எனினும் போரால், அதில் சிக்கி இதுவரை 31 ஊடகவியலாளர்கள் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது அந்த 31 ஊடகவியலாளர்களில் 26 பேர் பலஸ்தீனர்கள் ஆவர்.
இவர்களை அடுத்து 4 இஸ்ரேல் நாட்டினர் மற்றும் ஒரு லெபனான் ஊடகவியலாளரும் உயிரிழந்துள்ளனர்.
இதுதவிர, ஊடகவியலாளர்களில் 8 பேர் காயமடைந்து உள்ளனர். 9 பேர் காணாமலோ அல்லது சிறை பிடிக்கப்பட்டோ உள்ளனர் என்றும் தெரிவிக்கபட்டுள்ளது.
அன்னை பூபதி! ஈழ நிலத்தின் அன்னையர்களின் குறியீடு
1 வாரம் முன்