ஆயுதங்களை வைத்துவிட்டு கைகளை தூக்கினால் சுடமாட்டோம்! இஸ்ரேல் இராணுவம் பரபரப்பு
ஹமாஸ் அமைப்பினருக்கு எதிராக தாக்குதல் நடத்தி வரும் இஸ்ரேல் காசாவில் கண்மூடித்தனமான வகையில் தாக்குதல் நடத்தி வருகிறது, ஹமாஸ் அமைப்பினரை ஒழிக்கும் வரை போர் நிறுத்தம் செய்யப்படாது எனவும் இஸ்ரேல் இராணுவம் தெரிவித்து வருகிறது.
உலக நாடுகள் போர் நிறுத்தத்திற்கு அழுத்தம் கொடுத்து வருகின்ற போதிலும், தாக்குதலை சிறிதும் குறைக்கவில்லை, இந்த நிலையில் நேற்று (17) இதுவரை இல்லாத அளவில் மூர்க்கத்தனமான தாக்குதல்களை நடத்தியதாக கூறப்படுகிறது.
அதுமாத்திரமன்றி 1,000 பேரை பிடித்து வைத்துள்ளது இஸ்ரேல் ராணுவம். ஆயுதங்களைக் கீழே போட்டுவிட்டு, கைகளை தூக்கினால் நாங்கள் அவர்களை கைது செய்வோம், நாங்கள் அவர்கள் மீது துப்பாக்கிச்சூடு நடத்தமாட்டோம் என இஸ்ரேல் இராணுவம் அறிவித்துள்ளது.
உலக நாடுகள் எதிர்ப்பு தெரிவித்த போதிலும் தாக்குதலை தொடர்ந்து நடத்தி வரும் இஸ்ரேல் இராணுவம், நேற்று இதுவரை இல்லாத அளவிற்கு மிகப்பெரிய சுரங்கப்பாதையை கண்டு பிடித்துள்ளோம் எனவும் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
இது தொடர்பான மேலதிக செய்திகளை இன்றைய மதிய நேர செய்தித் தொகுப்பில் காண்க.