ஈரான் தலைநகரை நோக்கிய இஸ்ரேலின் புதிய தாக்குதல் அலை!!
இஸ்ரேல் பாதுகாப்பு படைகள் (IDF) இன்று மீண்டும் தெஹ்ரான் நகரம் முழுவதும் தாக்குதல்களின் புதிய அலை ஒன்றை தொடங்கியுள்ளதாக அறிவித்துள்ளது.
“ஈரான் ஆட்சிக்கு உட்பட்ட இராணுவ கட்டமைப்புகளை குறிவைத்து, தெஹ்ரான் முழுவதும் கூடுதல் தாக்குதல்கள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன,” என IDF அறிக்கையில் தெரிவித்துள்ளது.
இந்த நிலையில், குறிப்பிட்ட இடங்கள் குறித்து மேலதிக விவரங்கள் வழங்கப்படவில்லை, பின்னர் கூடுதல் தகவல்கள் வெளியிடப்படும் என கூறப்பட்டுள்ளது.
இஸ்ரேல் விமானப்படை
புதன்கிழமை இரவு ஈரானிய தலைநகரில் சக்திவாய்ந்த வெடிப்பு ஒன்று பதிவாகியுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

இதற்கு முன், இஸ்ரேல் விமானப்படை, தெஹ்ரானின் கிழக்குப் பகுதியில் உள்ள கட்டளை மையங்கள் மற்றும் உள்நாட்டு பாதுகாப்பு பணியாளர்கள் தங்கியிருந்த வளாகத்தை குறிவைத்து “விரிவான அளவிலான தாக்குதல்” ஒன்றை நிறைவு செய்ததாக இஸ்ரேல் இராணுவம் தெரிவித்திருந்தது.
தாக்குதல்களின் முழுமையான விளைவுகள் குறித்து இதுவரை தெளிவான தகவல்கள் வெளியாகவில்லை.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |