முக்கிய தலைகளை வீழ்த்தி சிதறடிக்கப்பட்ட ஈரான்: இஸ்ரேல் தாக்குதலில் புதியதோர் மைல்கல்
இஸ்ரேலின் முன்னெப்போதும் இல்லாத வகையிலான “Operation Rising Lion” என்ற இராணுவ நடவடிக்கையின் போது, இஸ்ரேல் பாதுகாப்பு படை (IDF)ஈரானில் உள்ள 900-க்கும் மேற்பட்ட இலக்குகளை தாக்கியதாக அறிவித்துள்ளது.
இந்த நடவடிக்கையில், 11 இரானிய அணு விஞ்ஞானிகள், மூன்று முக்கிய கமாண்டர்கள் உட்பட 30 உயர் நிலை பாதுகாப்பு அதிகாரிகள் கொல்லப்பட்டுள்ளதாக குறிப்பிடப்படுகிறது
முக்கிய கமாண்டர்கள்
கொல்லப்பட்ட முக்கிய கமாண்டர்களில் ஈரான் படைத்துறைத் தலைவரும், ஈரானிய புரட்சிகர காவல்படை (IRGC)தலைவரும், வான்படையின் தலைவருமே உள்ளடங்குவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
அத்துடன், 200 ஏவுகணை ஏவுநிலைகள் அழிக்கப்பட்டன, இது ஈரானின் ஏவுநிலைகளின் பாதியைக் கொண்டதாக IDF தெரிவித்துள்ளது.
கமேனியை கொல்லும் வாய்ப்பு
மேலும், விமானம் மற்றும் ஏவுகணை உற்பத்தி மையங்களும் அழிக்கப்பட்டதாகவும், இதனால் இருபதாயிரம் ஏவுகணைகள் உற்பத்தி செய்யும் வாய்ப்பு தடுக்கப்பட்டது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை, நேற்று நடைபெற்ற ஒரு தொலைக்காட்சி நேர்காணலில், இஸ்ரேலின் பாதுகாப்பு அமைச்சர், ஈரான் உச்ச தலைவர் அயத்துல்லா அலி கமேனியை கொல்லும் வாய்ப்பு ஏற்பட்டிருந்தால்,“அதையும் நிச்சயமாகச் செய்திருப்போம்” என தெரிவித்திருந்தார்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
