ஈரானின் மற்றுமொரு முக்கிய புள்ளி மீது இஸ்ரேல் தாக்குதல்! உறுதியானது மரணம்
புதிய இணைப்பு
ஈரானின் உளவுத்துறை அமைச்சர் இஸ்மாயில் கதிப் கொல்லப்பட்டுவிட்டதாக இஸ்ரேலின் பாதுகாப்பு அமைச்சர் இஸ்ரேல் கட்ஸ் உறுதிப்படுத்தியுள்ளார்.
நேற்று இரவு (17) ஈரானில் அடையாளம் காணப்பட்ட பல இலக்குகள் மீது இஸ்ரேல் நடத்திய தாக்குதல்களில் அவர் கொல்லப்பட்டார்.
ஈரானிய மதகுருவும் அரசியல்வாதியுமான கதிப், ஓகஸ்ட் 2021 முதல் உளவுத்துறை அமைச்சராகப் பணியாற்றி வந்தார். இறப்பின்போது 65 வயதாக இருந்த கதிப், அப்பதவிக்குத் தேர்ந்தெடுக்கப்பட்ட எட்டாவது அதிகாரி ஆவார்.
ஈரானின் உச்ச தேசியப் பாதுகாப்புக் குழுவின் செயலாளர் அலி லாரிஜானி, இஸ்ரேலிய தாக்குதலில் கொல்லப்பட்டதை ஈரான் உறுதிப்படுத்திய பின்னர், கதிப்பின் மரணத்தை இஸ்ரேல் வெளிப்படுத்தியுள்ளது.
ஈரானின் புதிய உச்ச தலைவர் மொஜ்தபா கமெனி மற்றும் அந்நாட்டின் இஸ்லாமியப் புரட்சிகரப் பாதுகாப்புப் படையின் மூத்த தலைவர்களைப் பிடிக்க வழிவகுக்கும் தகவல்களுக்கு 10 மில்லியன் டொலர் வரை வெகுமதி வழங்கப்படும் என அமெரிக்க வெளியுறவுத்துறை சமீபத்தில் அறிவித்துள்ளது.
அந்தப் பட்டியலில் இஸ்மாயில் கதிப் என்பவரின் பெயரும் இடம்பெற்றிருந்தது.
முதலாம் இணைப்பு
ஈரானிய உளவுத்துறை அமைச்சர் இஸ்மாயில் கதிப் மீது வான்வழித் தாக்குதல் நடத்தப்பட்டதாக இஸ்ரேல் இன்று(18) புதன்கிழமை தெரிவித்தது.
இந்தத் தாக்குதலின் விளைவுகளை டெல் அவிவ் இன்னும் மதிப்பீடு செய்து வருவதாக இஸ்ரேலிய சனல் 12 கூறியது,
மேலதிக விவரங்கள் வெளியாகவில்லை
ஆனால் அது குறித்த மேலதிக விவரங்கள் எதையும் அளிக்கவில்லை.

ஈரானின் பாதுகாப்பு செயலாளர் அலி லாரிஜானி மீது நேற்று (17)செவ்வாய்க்கிழமை தாக்குதல் நடத்தி அவரை கொன்ற நிலையில் இன்று இந்த தாக்குதலை இஸ்ரேல் நடத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
அலி கமேனி உட்பட சுமார் 1,300 படுகொலை
இந்த விவகாரம் குறித்து ஈரான் இதுவரை எந்தக் கருத்தும் தெரிவிக்கவில்லை.

பெப்ரவரி 28 முதல் இஸ்ரேலும் அமெரிக்காவும் ஈரான் மீது கூட்டுத் தாக்குதலைத் தொடர்ந்து வருவதால், பிராந்திய மோதல்கள் தொடர்ந்து தீவிரமடைந்து வருகின்றன. இதில், அப்போதைய உச்ச தலைவர் அலி கமேனி உட்பட இதுவரை சுமார் 1,300 பேர் ஈரானில் கொல்லப்பட்டுள்ளனர்.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |