ஈரானின் பசிஜ் துணை இராணுவ படை தளபதியை தாக்கி அழித்த இஸ்ரேல்
ஈரானில் நேற்றிரவு நடத்தப்பட்ட தாக்குதலில், பசிஜ் துணை இராணுவப் படைத் தளபதி குலாம்ரெசா சுலைமானி கொல்லப்பட்டதை இஸ்ரேலிய பாதுகாப்புப் படை (IDF) உறுதி செய்துள்ளது.
பசிஜ் அமைப்பால் சமீபத்தில் அமைக்கப்பட்ட கூடார முகாம் ஒன்றில் இருந்தபோது சுலைமானி குறிவைக்கப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.
இஸ்ரேலிய பாதுகாப்புப் படையின் (IDF) கூற்றுப்படி, குறித்த துணை இராணுவப் படையின் பல தலைமையகங்கள் மீது இராணுவம் தாக்குதல் நடத்திய பின்னரே பசிஜ் இந்த முகாமை இலக்கு வைத்ததாக தெரிவிக்கப்படுகிறது.
🔴 COMMANDER OF THE BASIJ UNIT ELIMINATED
— Israel Defense Forces (@IDF) March 17, 2026
Yesterday, the IDF targeted & eliminated Gholamreza Soleimani, who operated as commander of the Basij unit for the past 6 years.
Under Soleimani, the Basij unit led the main repression operations in Iran, employing severe violence,… pic.twitter.com/aJ0dNtCFz0
IDF அறிக்கை
மேலும், இந்தத் தாக்குதலில் பசிஜ் அமைப்பின் துணைத் தளபதி மற்றும் அந்த துணை இராணுவப் படையின் பிற உயர் அதிகாரிகளும் கொல்லப்பட்டதாக இஸ்ரேலிய பாதுகாப்புப் படை (IDF) தெரிவித்துள்ளது.

பசிஜ் அமைப்பானது, ஆட்சிக்கு எதிரான போராட்டங்களை வன்முறையாக அடக்குவதில் ஆற்றிய பங்கிற்காக அறியப்படுகிறது.
மேலும் எண்ணற்ற ஈரானியப் பொதுமக்களின் மரணங்களுக்கு அதுவே காரணம் என்றும் நம்பப்படுகிறது என IDF தெரிவித்துள்ளது.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |